முரசம் நேயர்களுக்காக சுவிற்சர்லாந்தில் உள்ள தமிழர் வர்த்தக நிலையங்கள், சுவிஸ் சுற்றுலாத்தளங்கள் ஆகியவற்றி்ன் முகவரி, தொலைபேசி இலக்கம், போகும் வழி போன்ற விபரங்களை “சுவிஸ் தகவல் திரட்டு”என்ற புதிய பகுதியூடாக தருகின்றோம்.
வர்த்தகர்களே உங்கள் நிறுவனங்களின் விபரங்களையும் இங்கே இணைத்துக்கொள்ளுங்கள்
சுவிஸ் செய்திகள்
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
விளையாட்டு செய்திகள்
உணவகத்தின் மீது மோதிய வாகனம் – 24 வயது இளம் யுவதி பலி 20. ஜூலை 2008 00:11 ரி.என்.ஜே அதிவேகமாக தனது வாகனத்தை செலுத்திவந்த 24 வயதுப் யுவதி ஒருவர் பாடன் நகர மத்தியில் உள்ள உணவகத்தின் மீது (Restaurant Paparazzi) மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார். பலியான இளம் யுவதி மேறபடி உணவத்ததில் வேலை செய்தவராவார்.விபரம்
சமூக உதவி ஊழியர் பணத்தை கையாடினார் 16. ஜூலை 2008 09:44 ரி.என்.ஜே பேர்ன் மாநிலத்தில் உள்ள றிகிஸ்பேர்க் என்னும் கிராமத்தில் சமூக உதவியாளர் ஒருவர் 234 000 பிராங் பணத்தை கையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையால் முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள்ளபட்டுள்ளது.விபரம்
இலவச செய்தித்தாள்கள் குப்பைகளை வெளியேற்றும் செலவை பொறுப்பேற்க கோரிக்கை 16. ஜூலை 2008 09:10 ரி.என்.ஜே சுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச செய்தித்தாள்கள் தமது பத்திரிகைகளின் பழைய தாள்களை வெளியேற்றுவதற்கான செலவை பொறுப்பேற்க வேண்டும், என்று சுவிஸ் சுற்றுப்புற சூழல் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது. இப்பத்திரிகைகளால் அதிகளவான குப்பைகள் நகரப்பகுதியில் சேர்வதாக முறையிடப்பட்டுள்ளது.
விபரம்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இலங்கைத் தூதரிடம் இந் திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி கடைசி நிமிஷத்தில் ரத்து செய்யப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.25 கோடி கொடுப்பதாக ஏ.பி.பரதன் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
இலங்கையின் ஒலிம்பிக் குழுவுக்கு சுசந்திக்கா தலைமை. 20. ஜூலை 2008 07:24 PTR. சீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை குழுவுக்கு குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
விபரம்
இலங்கையின் துடுப்பாட்டக்காரர்களுக்கு இஷாந்த் ஷர்மா நெருக்கடி தருவார்: வாஸ். 20. ஜூலை 2008 07:15 PTR. இலங்கை-இந்தியா டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி வழங்குவார் என்று இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு திறன் மெருகெறிவருவதாகவும் கூறினார்.
விபரம்
இங்கிலிஷ் பிரீமியர் லீக்கின் ‘இருபதுக்கு-20’ 2010இல் ஆரம்பம். 20. ஜூலை 2008 06:39 PTR. இங்கிலிஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் 2010ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் 18 பிராந்திய அணிகளுடன், வெளிநாட்டு பிராந்திய அணிகள் 2 இணைக்கப்பட்டு மொத்தமாக 20 அணிகளுடன் போட்டிகள் நடைபெறும்.
விபரம்
சிங்கள அரசின் இனவெறித்தனத்தால் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்புயூலையின் 25 ஆம் வருடத்தினை நினைவு கூரும் நிகழ்வு சுவிஸ் மகளிர்; அமைப்பின் ஏற்பாட்டில் 13.07.08 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது. (படத்தொகுப்பு)