மதவாச்சி சோதனைச் சாவடியில் குறைந்தளவிலான பாதுகாப்பு அதிகாரிகளே கடமையாற்றுவதால் பயணிகள் நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளதுடன் பல்வேறு சிரமங்களையும் எதிர் நோக்குகின்றனர் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அம்பாரை மாவட்டம் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவுப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இளம் தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப் பட்டார்.
பொலநறுவையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வழமைபோல கடலில் கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் படகுகள் மீது இன்று காலை 6.30 மணியளவில் விமானப் படையின் கிபிர் தாக்குல் விமானங்கள் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் மீனவர்களின் நான்கு படகுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பாலமீன்மடு மனிதப் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட 21 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மரபணு (டி.என்.ஏ.) பரி சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு மனித புதைகுழி தொடர்பாக நீதியான விசாரணை நடத்த சர்வதேச மன்னிப்பு சபை, மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
"சார்க்' மாநாட்டை முன்னிட்டு யாழ். குடா நாட்டுக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துகள் சுமார் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டுவரும் எறிகணைத்தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இதுவரை 7000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கிளிநொச்சி பகுதியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட வெற்றியை கிழக்கின் உதயம் எனும் பெயரில் இலங்கை அரசாங்கம் கொண்டாடி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதும், கிழக்கு மாகாணம் இன்னமும் வழமைநிலைக்குத் திரும்பவில்லை என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கண்காணிப்பதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட எட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஓரிரு அதிகாரிகளுடன் மாத்திரம் நோர்வேயில் இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவுள்ள நிலையில், இலங்கையில் கண்காணிப்புக்குழு பணிபுரிந்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட கோவைகள் மற்றும் தரவுகளை நோர்வே தேசிய ஆவணக்காப்பகத்தில் வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுவர்களை படையில் ஆட்சேர்க்கும் சில குழுக்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளது.
வடக்கு, கிழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தென்சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாவதாக பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவை சேர்ந்த தமிழ் பெண்னான குற்றவியல் நீதிபதி ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பணிப்பாளராக செயலாளர் நாயகம் பான் கீ மூனால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது