விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை வஞ்சித்தவர் முதல்வர் கருணாநிதி என்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
பெங்களூர், அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புக்காக மீண்டும் பொடா சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத் தில் கையெழுத்திடுவதில் காலவரையறைக்குள் செல்லவில்லை; எனி னும் நாட்டின் நலன்களுக்கே முன் னுரிமை அளிக்கப்படும் என்று மத் திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத் தலைநகர் அஹமதாபாத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 105 பேர் படுகாயமடைந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இலங்கை கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தமிழக கடற்படைத் தளபதி கொமாண்டர் பி.ஈ.வான் ஹல்ட்ரென் மறுத்துள்ளார்.
மக்களவை உறுப்பினர்கள் எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.