இந்தியாவின் பெங்களூரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 5 தொடர்குண்டு வெடிப்புக்களில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 20ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்தில் அக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று முதல்வர் கருணாநிதி தில்லியில் புதன்கிழமை கூறினார்.
ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்று சேது சமுத்திரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் கூறினார்.
மத்திய அரசை ஆதரிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்களுடைய மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று கருதுகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி.
ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியின் நிலைமையில் உள்ளதாக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 272 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக சில தகவல்கள் கூறுவதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.
"ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தொழிலாளர்களின் சாதாரண கோரிக்கைகளைக் கூட ஆட்சியில் நிறைவேற்றவில்லை எனில், தொழிற்சங்கம் நடத்தும் தார்மிக உரிமையை இழந்துவிட்டன'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகார் கூறினார்.