|
பொன் சிவகுமாரின் 33வது ஞபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி. |
|
|
|
.
|
|
24. March 2007 16:12 |
 தியாகி பொன் சிவகுமாரனின் 33வது ஆண்டு ஞாபகார்த்த நாளை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் செங்காலன் மாநிலத்தில் 3வது தடவையாக உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 17,18ம் திகதிகளில் நடாத்தப்பட்டது.
17ம் திகதி அன்று வளர்ந்தவர்களுக்கான சுற்றுப்போட்டியும் 18ம் திகதி சிறியவர்களுக்கான சுற்றுப்போட்டியுமாக இரு நாட்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டன.
முதல் நிகழ்வாக தியாகி சிவகுமாரனின் படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றியும் அதனைத்தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தியும் பின்னர் படுகொலைசெய்யப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவர்களின் நினைவைச்சுமந்த அகவணக்கத்துக்குப் பின்னர் போட்டிகள் ஆரம்பமாகின. இச் சுற்றுப்போட்டியில் கூடுதலான மாநிலங்களில் இருந்து விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தன.
|