22. November 2008 12:43
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
4. October 2008 12:47
15. October 2008 12:52
12. October 2008 00:13
11. October 2008 23:48
குமார் பொன்னம்பலம் முதல்……தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
11. May 2007 08:00
ponnampalam_kumar.jpgகுமார் பொன்னம்பலம் முதல் இன்று வரை இடம்பெற்றுவரும் தமிழ் அரசியல்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள்…. பின்னணிகள்…இரகசியச் சதிகள்…ஆதாரங்கள்…..
அங்கம்-6
(இரா.துரைரத்தினம்)
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான இசுசு வாகனத்தில் வந்தவர்களே குமாரை சுட்டுக்கொன்றனர்.

chandrika.jpgசந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்திற்கு மட்டுமல்ல காலத்திற்கு காலம் பதவியில் இருந்த சிறிலங்கா அரசாங்கங்களுக்கும் குமார் பொன்னம்பலம் ஒரு சவாலாகவே இருந்தார். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்தி வந்தார்.

ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த பின் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிரிசாந்தி உட்பட 700க்கு மேற்பட்ட பொதுமக்களை கடத்திச்சென்று படுகொலை செய்த சம்பவத்தை ஆவணப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவின் போலித்தனங்களை நேருக்கு நேராக அம்பலப்படுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரிக்கா, குமார் பொன்னம்பலத்தை கொல்வதற்கு திட்டமிட்டதையும் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ என்பவரிடம் ஒப்படைத்திருந்ததையும் ஏற்கனவே கடந்த இதழ்களில் பார்த்திருந்தோம்.

சந்திரிக்கா தன்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறார் என்பதை உணர்ந்து கொண்ட குமார் பொன்னம்பலம் என்னுடைய இரத்தம் அவர்களுக்கு தேவைப்படுகிறது என கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முதல் சொன்னார். அது உண்மையாக நடந்து விட்டது.

kumar_assasination_1_050100.jpgகுமார் பொன்னம்பலம் 23.12.1999 அன்று சந்திரிக்காவுக்கு எழுதிய பகிரங்க கடிதம் சண்டே லீடர் பத்திரிகையில் பிரசுரமானதும் பிரதிபொலிஸ்மா அதிபர் நிஹால் கருணாரத்னா, சஞ்சீவ ஆகியோரை அழைத்து உடனடியாக தனது உத்தரவை நிறைவேற்றும் படி கூறினார்.

இந்த கொலை திட்டத்தின் ஒரு அங்கமாக சாந்த என்ற நபர் குமார் பொன்னம்பலத்துடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டமை பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். சாந்த என்பவன் உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்தவன்தான்.  ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தரவின் பேரில் சஞ்சீவ கூறும் நபர்களை கொலை செய்வதுதான் இவனின் வேலை.
சில கொலைகள் தொடர்பாகவும் இவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.   
இந்த வழக்கு தொடர்பாக குமார் பொன்னம்பலத்திடம் இவன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதுடன் மிகவும் விசுவாசம் ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டான்.

அரைமணி நேரத்தில் திரும்பிவருவேன் என சென்றவர்.......

கொலை நடைபெறுவதற்கு முதல் நாள் மாலையும் குமார் பொன்னம்பலம் வீட்டிற்கு தொலைபேசி எடுத்திருந்தான். அப்போது நாளை நீதிமன்றத்திற்கு செல்லமாட்டேன் வீட்டில்தான் நிற்பேன் என குமார் பொன்னம்பலம் சொல்லியிருந்தார்.
மறுநாள் காலை 9மணியளவில் சாந்த என்பவன் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட தயாரானார்கள். அப்பொழுது காலை 9மணியளவில் பிளவர்ஸ் வீதியில் தற்கொலை குண்டுதாக்குதல் ஒன்று நடைபெற்றது. கொழும்பு நகரில்  பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்நேரத்தில் ஏன் வெளியில் செல்கிறீர்கள் என கஜேந்திரகுமார் தந்தையை தடுத்தார். அரைமணிநேரத்தில் திரும்பி வந்து விடுவேன் என கூறிய குமார் பொன்னம்பலம் சாந்த என்பவனுடன் நீலநிற பென்ஸ் காரில் 10மணியளவில் புறப்பட்டு சென்றார்.

சுமார் 11.00மணியளவில் சண் எவ்.எம்.வானொலியிலிருந்து தொலைபேசி அழைப்பு குமார் பொன்னம்பலம் வீட்டிற்கு வந்தது. கஜேந்திரகுமார்தான் தொலைபேசியை எடுத்தார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. உங்கள் தந்தை இறந்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. உண்மையா என சண் எவ்.எம். நிலையத்திலிருந்து கேட்டார்கள். கஜேந்திரகுமாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே தந்தையின் 077311922 என்ற இலக்க கைத்தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தார். அத்தொலைபேசியின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

உடனே கஜேந்திரகுமார் அவரின் வீட்டில் வேலை செய்யும் தோமஸ் என்பவருடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார். வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் நீலநிற பென்ஸ் காரின் சாரதி ஆசத்தில் துப்பாக்கி சூடு பட்டு இறந்த நிலையில் குமார் பொன்னம்பலம் காணப்பட்டார்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி

குமாரின் கொலை சம்பவத்தை கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவர் நேரில் கண்டிருக்கிறார். அவர் குமார் பொன்னம்பலத்தின் நண்பரும் கூட. அவரின் பாதுகாப்பு கருதி அவரின் பெயரை நாம் இங்கு குறிப்பிடவில்லை.
சம்பவம் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முதல் அவர் இராமகிருஷ்ண  ரெரன்ஸ் அவனியூ 7ம் இலக்க வீட்டிற்கு சென்ற போது இராமகிருஷ்ணவீதியில் உள்ள இராமகிருஷ்ண ஒழுங்கை வளைவில்  Jet- black  Isuzu  Jeep    நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு கண்ணாடி போட்ட அவ்வகை வாகனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்தவர்களும்  அமைச்சரவை அமைச்சு பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்தவர்களும் மட்டுமே  பாவிப்பார்கள். அதற்கு அப்பால் சற்று தள்ளி
பொன்னம்பலத்தின் காரும் இடது பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. காருக்குள் முன் சீற்றில் ஒருவர் இருந்தார். இன்னொருவர் ஜன்னலுக்கு வெளியில் நின்றார். அவர்களை  கடந்து சென்ற அவ்வர்த்தகர் இலக்கம் 7 இராமகிருஷ்ண ரெரன்ஸ் வீதியில் உள்ள வீட்டில் அழைப்பு மணியை அழுத்தினார். அங்கு யாரும் இல்லை. அவர் திரும்பியபோது வெடிச்சத்தம் கேட்டது. சென்றவழியால் திரும்பி வந்தபோது குமார் பொன்னம்பலம் சுடப்பட்ட நிலையில் காணப்பட்டார். மற்ற மனிதரையும் அந்த ஜீப்பையும் காணவில்லை. விவேகானந்த வீதியில் இருபொலிஸார் நின்றனர். அவர்களிடம் தகவலை சொன்னார்.
பின்னர் பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டபோதும் அது வெறும் கண்துடைப்பாகவே இருந்தது.

kumar_assasination_1_050100.jpgசம்பவம் நடைபெற்ற போது அங்கு காணப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த அந்த ஜீப் பற்றி பொலிஸார் எந்த வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. அக்கொலையை விசாரிப்பவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் பற்றி விசாரித்திருக்க வேண்டும். அதைப்பற்றி விசாரிப்பதை பொலிஸார் ஏன் தவிர்த்துக்கொண்டனர் ?. அது மட்டுமல்ல இவ்வாறான ஒரு கொலை நடைபெற்றால் சி.ஐ.டியினர் உடனடியாகவே விசாரணைகளை ஆரம்பிப்பார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களின் பின்பே சி.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதுவும் வெறும் கண்துடைப்பாகத்தான் நடைபெற்றது.

ஏற்கனவே கொலைக்கான திட்டத்தை தீட்டிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த சஞ்சீவ, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த மற்றுமொரு நபரான சுனில் ரணசிங்க மற்றும் முறட்டுச்சமன் ஆகியோர் அந்த ஜீப் வண்டியில் வந்து காத்திருந்தனர். குமார் பொன்னம்பலத்தை அந்த இடத்திற்கு அழைத்து வந்த சாந்த என்பவன் சஞ்சீவ என்பவனை தன்னுடைய நண்பன் என அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த போது முறட்டு சமன் என்பவனே குமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி பிரயோகத்தை செய்தான். குமாரை சுட்டுக்கொன்றதும் சாந்த என்பவன் கொலைகாரர்களுடன் அந்த ஜீப்பில் தப்பிச்சென்றுவிட்டான். குமார் பொன்னம்பலத்தின் கைத்தொலைபேசியையும் அவர்கள் அபகரித்து சென்றனர்.

பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் குமார் பொன்னம்பலத்தின் வாகனத்தை பரிசோதித்தனர். கைஅடையாளம் எதுவும் இல்லை, குண்டுகளும் காருக்குள் இல்லை என்றனர். ஆனால் பின்னர் அந்த காருக்குள் இருந்து இரு தீர்ந்த தோட்டாக்களை குமார் பொன்னம்பலத்தின் வீட்டார் எடுத்திருந்தனர்.
அன்று மாலை இலங்கை வானொலி ரூபவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றின் செய்தியில் குமார் பொன்னம்பலத்தை புலிகளே சுட்டுக்கொன்றனர் என கூறினார்கள். ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்த விசேட உத்தரவின் பேரிலேயே அவ்வாறான ஒரு செய்தி வெளியிடப்பட்டது என பின்னர் தெரியவந்தது.
குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட மறுநாள் (6.1.2000) கொழும்பில் உள்ள முக்கிய ஊடகங்களுக்கு புலிகளுக்கு எதிரான தேசிய இயக்கம் என்ற பெயரில் தொலைநகல் மூலம் ஒரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அதன் பின்னணி பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்

(தொடரும்)

 நன்றி

nilavaram

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >