|
14.01.07 அன்று சுவிஸ்(கூர்) நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 14வது ஞாபகார்த்த எழுச்சிவிழா. |
|
|
|
.
|
|
18. January 2007 02:13 |
கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 14 வது ஞாபகார்த்த எழுச்சி விழா, கடந்த 14.01.2007 ஞாயிறு அன்று சுவிஸில் கிறபுண்டன் மாநிலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.
15.00 மணிக்கு தேசியக் கொடியேற்றலோடு ஆரம்பமாகிய அன்றய நிகழ்வு 08.30 மணியளவில் தேசியக் கொடியிறக்கப்பட்டு நிறைவு செய்யப்hட்டது. இன் நிகழ்வில் கிறபுண்டன் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்வித்தியாலய மாணவர்கள் ஒன்று கூடி தளபதி கிட்டு பற்றிய பாடலைப் பாடி மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, மண்டபம் நிறைய கூடியிருந்த மக்களும் மலர் வணக்கம் செலுத்தும் வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் களை கலை பண்பாட்டுக் கழகத்தினரின் இசையில் எழுச்சி கானங்கள் வளங்கப்பட்டதோடு, கிறபுண்டன் தமிழ் வித்தியாலய மணவர்களின் சுரத்தட்டு, வயலின், போன்ற கருவிகளைக் கொண்டு இசைக்கப் பட்ட இசைகளும், எழுச்சி நடனங்கள், நாடகம், இவைகளோடு வித்தியாலய ஆசிரியர்களின் கவிதாஞ்சலி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்ற இவ் நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினர் திரு.தனன்பிள்ளை கனகசபை அவர்கள் சிறப்புரை வளங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். |