| தமிழ்ப் பெண்கள் அமைப்பு சுவிஸ் கிளை நடத்திய தமிழர் திருநாள் 2008 |
|
|
| . | |
| 21. January 2008 16:50 | |
நிகழ்வு 20.01.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.
தமிழ்ப் பெண்கள் அமைப்பு சுவிஸ் கிளை முதன் முறையாக நடத்திய இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், ஈகைச் சுடரேற்;றல், அகவணக்கம், வரவேற்புரையுடன் கலை நிகழ்வுகள் வீணை இசையுடன் ஆரம்பமாகின.
புறோக்கர் செக்கண்ட் சின்னத்தம்பி, Made in Srilanka எனும் நாடகங்கள் புலம்பெயர் வாழ்வின் யதார்த்த நிலையை எடுத்துச் சொல்வனவாக அமைந்திருந்தன. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிளாறவுஸ் மாநில தமிழ்க் கலாச்சார மன்றத்தைச் சேர்ந்த திரு.திருமதி பேனாட் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிகழ்வை ஐபிசி தமிழின் அறிவிப்பாளர் பரா.பிரபா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|


நிகழ்வு 20.01.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது.