22. November 2008 09:31
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
3. October 2008 18:45
12. October 2008 00:13
15. October 2008 12:52
11. October 2008 23:48
சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவரம் பத்திரிகைக்காக எல்லாளன்   
16. March 2008 23:40
ltte_figiters1.jpg1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.

இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் நாலரை வருடங்கள் சமாதான காலமாகக் கழிந்திருந்தன. மிகுதி 8 வருடங்களும் போர்க்காலமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.இந்த 8 வருடப் போர்க்காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வகையில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். இக்காலத்தில்தான் புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றல் உலகிற்குத் தெரியவந்த சமர்கள் நிகழ்ந்த காலமாகும்.இந்தவகையில், வன்னிப் பெருநிலப் பரப்பும் வரலாற்றில் மிகமுக்கிய இடத்தைப் பெற்றுவிட்ட போர்க்களமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. புலிகளை ஒடுக்கி, அழிக்க வாய்ப்பான நிலப்பகுதி என்று சிங்களத் தளபதிகள் கருதியிருந்த வன்னிநிலம்;

சிங்களப்படையின் புதைகுழியாக மாறிவரும் நிலையைக் கண்டு சிங்களதேசம் குழப்பத்தில் உள்ளது. வன்னியில் போராட்டம் மையம் கொண்ட நிலையில் நடந்துவரும் இந்த 8 வருடப் போரில் சுமார் பன்னிரண்டாயிரம் (12000) சிங்களப் படையினர் வன்னிநிலத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளனர். 1996 இருந்து 2002 வரை பின்னர் 2006 ஒக்டோபரிலிருந்து இன்று வரையான (2008 பெப்ரவரி)  இந்த 8 வருடப்போரில் சில முக்கியமான சமர்கள் வன்னியில் நடந்திருந்தன.
அதில் முதலாவது பாரிய சண்டையாக முல்லைத்தீவு கூட்டுத்தளம்மீது புலிகள் நடாத்திய ஓயாத அலைகள் ஐ வலிந்த தாக்குதல் அமைந்திருந்தது.

படைத்தள அழிப்பு மற்றும் கடல்வழி தரையிறங்கிய படையினரைச் சிதைத்த அந்தச் சண்டைகளில் சுமார் 800 படையினர் அழிக்கப் பட்டிருந்தனர்.

முல்லைத் தளத்தைப் புலிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து கிளிநொச்சியை ஆக்கிரமிக்க சிங்களப்படை முயன்றது. ~சத்ஜெய| என்ற பெயரிலான அந்த நகர்வுக்கு எதிராகப் புலிகள் எதிர்ச்சமர் தொடுத்தனர். இந்தச் சண்டைகளில் 650 படையினர் வரை கொல்லப் பட்டிருந்தனர்.


கிளிநொச்சி நகரைப் படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்தபோது ஆனையிறவு - பரந்தன் நிலைகள் மீது புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர். அதில் 250 படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி நகரை மீட்டெடுத்த ஓயாத அலைகள் ஐஐ வலிந்த தாக்குதலில் சிக்கிச் செத்த படையினரின் எண்ணிக்கை சுமார் 1150 ஆகும்.


அதே சமயம், வவுனியா - யாழ்சாலை வழியே நகர்ந்து நிலம் விழுங்கி வன்னியைத் துண்டாட ஆசைகொண்டு படைநகர்த்திய சிங்களப் படைத்தலைமை பலத்த அடிவாங்கியது.
இதுவரை காலமும் நடந்த சமர்களில், அதிகளவு படையினர் கொல்லப்பட்ட, தனித்த சமராக ஜெயசிக்குறு அமைந்துள்ளது.
ஜெயசிக்குறுவுக்கு எதிராக புலிகள் தொடுத்த நீண்ட எதிர்சமரில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் மேல்.

வன்னிக்குள் புகுந்து அகலாக்கால் பரப்பிய சிங்களப்படைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் முகமாக ஓயாத அலைகள் ஐஐஐ நடவடிக்கையை தலைவர் அவர்கள் தொடக்கி வைத்தார்.

ஜெயசிக்குறு விழுங்கிய நிலத்தை ஓயாத அலைகள் ஐஐஐ மீட்டெடுத்தது. கதிகலங்கிப் படையினர் ஓட்டம் பிடித்ததால் ஏறக்குறைய 500 படையினரை மட்டுமே புலிவீரர்களால் அழிக்க முடிந்தது. இந்த ஓட்டத்துடன் படையை விட்டோடிய சிங்களச் சிப்பாய்களின் எண்ணிக்கை பல்லாயிரமாகும்.

புதிய இராணுவ பரிமாணத்துடன் நடந்த குடாரப்பு தரையிறக்கத்துடன் ஆரம்பித்து - ஆனையிறவு படைத் தளத்தை அகற்றி முடித்த ஓயாத அலைகள் ஐஐஐ இன் முடிவில் புலிகள் இயக்கத்தின் போரியல் ஆற்றல் உலக இராணுவ ஆய்வாளர்களால் வியந்து போற்றப்படும் அளவுக்கு அமைந்திருந்தது.

வட போர்முனையில் புதிய முன்னரங்கு உருவாகி யிருந்தது. கிளாலி - முகமாலை - நாகர்கோவில் என்ற அந்த முன் அரங்கைப் பிளந்து கொண்டு, இழந்த ஆனையிறவைக் கைப்பற்ற சிங்களப் படை முயன்றது.
 பாரிய அளவில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி ஷதீச்சுவாலை| என்று பெயரிட்டு சிங்களம் நடாத்திய அந்த நெருப்பு வீச்சைப் புலிவீரர்கள் தாக்குப்பிடித்துத் தடுத்து நிறுத்தினர். மறிப்புச்சமரில் புலிகள் காட்டிய உறுதியும் அதில் கடைப் பிடித்த போர்த்தந்திரங்களும் சிங்களப் படைக்கு மரணத்தையே பரிசளித்தன.மூன்று நாhட்கள் தொடந்து நடந்த தீச்சுவாலைக்கு எதிரான சமரில் 750 படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்த வரலாற்றுத் தோல்வியுடன் சிங்களப்படை போர்நிறுத்த உடன்பாட்டிற்கு வந்தது. அதன்பின் 4 1/2 வருடங்கள் சமாதானமாகக் கழிந்தன.
2006 ஒக்டோபரில் மீண்டும் போர் வெடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை வன்னிப் பெருநிலப்பரப்பில் மரவுபழிப்போர் நடைபெற்று வருகின்றது. இந்த 16 மாதப் போரில் வன்னியில் மட்டும் சுமார் 2000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வட போர் முனை, மன்னார் களமுனை, வவுனியா- மணலாறு களமுனைகளில் படையினருக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டன.

இந்தவகையில் கடந்த 8 வருடப் போரில் 12000 சிங்களப் படையினரைக் கொன்ற களமாக வன்னிக்களம் காணப்படுகின்றது. இந்தப் புதைகுழி இன்னும் அதிகரிக்கும். சிங்களப் படைகளின் பாரிய புதைகுழியாக வன்னிப் பெருநிலப்பரப்பு மாறி -  அதன் படுதோல்வியை வன்னிநிலம் நிர்ணயிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >