|
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களின் ஆபத்தான நிலை! |
|
|
|
தர்சிகா
|
|
15. April 2008 20:48 |
வெளிநாட்டில் வாழும் - சுவிஸ் மக்கள் - சுவிற்சர்லாந்தின் சேமிப்பு திட்டங்கிளிற்கு தாங்களே பலியாவதாக கருதுகின்றார்கள். ஒருபக்கம் வேலைத் தூதுவராலயங்கள் மூடப்பட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் இயங்கும் சுவிஸ் பாடசாலைகளின் நிலை ஆபத்தில் உள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றார்கள்.
வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களின் தொகை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. தற்போது இத் தொகை 670 000 ஆக உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு வேலைத் திட்டங்களுக்கான செலவுத் தொகையை சுவிஸ் நாடாளுமன்றம் சேமித்து வருகின்றது.
மேலும் வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்கள், சுவிற்சர்லாந்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் தாங்கள் வாக்களிக்கும் முறையை இலகுவாக்குமாறு கேட்டுள்ளனர்.
தற்போது வாக்கெடுப்பில் வாக்களிக்கும், வெளிநாட்டில் வாழும் சுவிஸ் மக்களின் எண்ணிக்கை 120 000 என உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
|