|
பாதாள உலகக் குழுவினரின் கறுப்புப்பணத்தை சுவிற்சர்லாந்தும் ஜப்பானும் பகிர்வு |
|
|
|
சுவிஸ் நிருபர்
|
|
18. April 2008 22:55 |
 சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஜப்பானின் கோரியோகாய் அமைப்பினர் சட்டவிரோதமாக வசூளித்த 58.4 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை சுவிஸ் வங்கிகளில் வைப்பில் இட்டிருந்தனர். சுவிஸ் அரசாங்கத்தால் சூரிச்சில் கைப்பற்றப்பட்ட இப் பணத்தை சுவிற்சர்லாந்தும் ஜப்பானும் அரைவாசியாகப் பகிர்ந்து எடுப்பதென்று இரு அரசாங்கங்களும் முடிவெடுத்துள்ளனர்
சுவிஸ் நீதித்துறைத் திணைக்களம் ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்ததால் இச் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்ததாக அத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த 58.4 மில்லியன் பிராங்குகளும் 2003ம் ஆண்டு மேற்குறிப்பிட்ட சட்டவிரோத அமைப்பின் முக்கிய அங்கத்தவரான சுசுமு கைவாமா என்பவரின் பெயரில் சுவிஸ் வங்கியில் வைப்பில் இடப்பட்டிருந்ததையடுத்து இதுபற்றிய விபரம் ஜப்பான் அரசாங்கத்துக்கு சுவிஸ் அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜப்பானில் விசாரணைகளை நடத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கிலேயே இப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|