|
வாகனத்தரிப்பிடத்தில் கார்கள் சேதப்படுத்தபட்டது - 200 000 பிராங் இழப்பு |
|
|
|
ரி.என்.ஜே
|
|
19. April 2008 13:52 |
இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் பேர்ன் கனரோன் Steffisburg என்னுமிடத்தில் வாகனத்தரிப்பிடத்தில் இனந்தெரியாத நபர்களால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமாக்கபட்டதில் 200 000 பிராங் சேதம் ஏற்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபர்கள் இரு கார்களுக்கு தீ வைத்துமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களிற்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பட்ட Berner Oberland அதிகாரிகள் 200 000 பிராங்கிற்கு மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.
காவற்துறையினர் மேலதிக விசாரணைக்காக சாட்சிகளை தேடுவதாக தெரிவித்துள்ளனர். சாட்சி சொல்ல விரும்புவர்கள் காவற்துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Vandalism எனப்படும் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தும் இவ்வாறாக செயல்களால் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுவதாக சுவிஸ் காவற்துறைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
|