| அன்னை பூபதி நினைவு நிகழ்வு மிகவும் எழுச்சியாக சுவிற்சர்லாந்தின் வோ மாநிலத்தில் நடைபெற்றது |
|
|
| . | |
| 20. April 2008 10:50 | |
இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அகிம்சைப் போர் தொடுத்து தன்னுயிரை தாயகத்துக்கு வித்தாக்கிய அன்னை பூபதியின் இருபதாவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகனின் முதலாம் ஆண்டு நினைவு கூரலும் 19.04.2008 சனியன்று சுவிற்சர்லாந்தின் வோ மாநிலத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட இவ் எழுச்சி விழா மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு இரு மாவீரர்களைப் பெற்றெடுத்த தாயார் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களுக்கான ஈகைச்சுடரினை அவர்களது உறவுகள் ஏற்றி வைத்தனர். அகிம்சையின் வழி நின்று தன்னுயிரை ஈகம் செய்த உலகின் முதற் பெண்ணான அன்னை பூபதிக்கும் போராட்டத்தில் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், போரிலே கொல்லப்பட்ட மக்களுக்குமாக அகவணக்கம் நடைபெற்றது. தொடர்ந்து மண்டபம் நிறைந்திருந்த மக்கள் அன்னை பூபதிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகனுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் உணர்வு பூர்வமாக தமது மலர் வணக்கத்தைச் செலுத்தினர். அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக் குழுவினரால் எழுச்சி கானங்கள் இசைக்கப்பட்டன. இம்ரான் பாண்டியன் படையணியின் ஈட்டி முனைகள் இறுவட்டு வெளியீடு நடைபெற்றதைத் தொடர்ந்து விடுதலைத்தீயை அரவணைத்த அன்னை என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்துக் கிளைப் பேச்சாளர் திரு.அல்பேட் அவர்களின் உரையும் இடம்பெற்றது. திருக்கோணேஸ்வர நடனாலாயம், வல்வை நர்த்தனாலயம், மொந்துரோ தமிழர் இல்லம் ஆகிய மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன. அன்னை பூபதியின் வரலாற்றை மிகவும் சிறப்பான வகையில் வில்லுப்பாட்டு மூலம் மாணவிகள் வழங்கினார்கள். விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக நாடகக் கலைஞர்கள் வழங்கிய மனிதம் நாடகம் நடைபெற்றது. மண்டபத்தில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டதோடு புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தமிழரின் தாரக மந்திரத்தை அனைவரும் வலது கரத்தை உயர்த்தி தெரிவிக்க நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|


இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அகிம்சைப் போர் தொடுத்து தன்னுயிரை தாயகத்துக்கு வித்தாக்கிய அன்னை பூபதியின் இருபதாவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நினைவுகூரலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகனின் முதலாம் ஆண்டு நினைவு கூரலும் 19.04.2008 சனியன்று சுவிற்சர்லாந்தின் வோ மாநிலத்தில் நடைபெற்றது.