22. November 2008 04:05
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
இணைய செய்திகள்
பதிவு புதினம் சங்கதி தமிழ்வின்info தமிழ்பிபிசி தமிழ் யாழ் இணையம்
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
12. October 2008 00:13
15. October 2008 12:52
13. October 2008 13:01
11. October 2008 23:48
முக்கிய செய்தி
2. November 2008 12:23
1. November 2008 06:30

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை தமிழீழ கடற்புலிகள் அணிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் டோரா தாக்குதல்...

முகமாலை தரும் பாடம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
நிலவரத்தின் ஆசிரியர் பக்கம்   
25. April 2008 19:11
20080423006.jpgஎதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், சிறந்த திட்டமிடலுடன், உச்சபலத்தைப் பிரயோகித்துத் தாக்குவதே விடுதலைப் புலிகளின் வழக்கமான உத்தி. அது முகமாலைக் களமுனையா, வவுனியாக் களமுனையா, மன்னார்க் களமுனையா, மணலாறுக் களமுனையா, திருமலையா, மட்டக்களப்பா, அம்பாறையா, கொழும்பா, தென்பகுதி மாவட்டமா அல்லது கடந்த அக்டோபரில் அநுராதபுரம் தாக்கப்பட்டதைப் போன்று எதிர்பாராத ஒரு இலக்கா என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரியவரும் என, வன்னிக் களமுனை மாறுமா? என்ற தலைப்பில் கடந்த இதழில் ஒரு கட்டுரையை வடித்திருந்தோம்.

எதிர்வு கூறப்பட்டதைப் போன்றே தற்காப்பு யுத்தத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்காப்பு யுத்தத்துடன் சிறிய அளவிலான முன்னேறித் தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டதாக மன்னார்க் களமுனையில் இருந்து கடந்த வாரம் வெளிவந்த சேதிகள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம், களமுனையில் பொறி பறக்கும் சண்டைகள் அடுத்து வரும் நாட்களில் காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

கூலிக்காக சண்டை பிடிப்பவர்களுக்கும் வாழ்வுக்காகச் சண்டை பிடிப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பது முகமாலைக் களமுனையில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, முகமாலைக் களமுனையின் தளபதியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் மிக நீண்டகால படை நடத்தல் அனுபவத்தைக் கொண்ட தளபதியான கேணல் தீபன் நியமிக்கப் பட்டுள்ளதாக சேதிகள் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஒரு யுத்த தாங்கி அழிக்கப்பட்டதான செய்தியும், பின்னரங்க நிலைகளிலே எறிகணை நிலைகள் தீப்பிடித்த செய்தியும் வெளியாகியிருந்தது. சகல களமுனைகளிலும் முன்னேற்ற முயற்சி தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டுமொருமுறை முகமாலைக் களத்தில் முயற்சியொன்றைச் செய்து பார்க்க இராணுவம் முயன்றது.

2006 அக்டோபரில் இதே களமுனையில் நிகழ்ந்த மோதலில் 190 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 600 பேர் காயப்பட்ட அனுபவம் இருந்த போதிலும், முன்கூட்டியே தயாரிப்புகள் செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கவசப்படை அணியின் உதவியுடன் தாக்குதல்களை நடாத்த முடிவு செய்யப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா முறித்துக் கொள்வதாக தன்னிச்சையாக அறிவித்துள்ள போதிலும், அதிலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறி விடாது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதல்களிலேயே ஈடுபட்டு வந்த போதிலும், ~எதிரிக்குத் தாக்குதலை நிதானமாகத் திட்டமிட்டு நடாத்த அவகாசம் வழங்காது தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் போதே அதனை முடிந்தவரை சீர்குலைத்து விட வேண்டும்| என்ற இராணுவ உத்திக்கு ஏற்ப நடாத்திய தாக்குதலாகவே 22 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலைக் கருத வேண்டும். இத்தாக்குதல் ஏற்படுத்திய பாதிப்பே எதிரியை நிதானமிழக்கச் செய்து புதன்கிழமை அதிகாலையில் அவசர அவசரமாக ஒரு தாக்குதலைச் செய்யத் தூண்டியது.

இதனை எதிர்பார்த்து வலைவிரித்துக் காத்திருந்த புலிகள் நடாத்திய துணிகரத் தாக்குதலில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 375 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக படைத்தரப்பே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, இராணுவத்தினரின் 104 உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும், 400 பேர் வரையானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் தரவுகளின் படி இராணுவத்தினரின் 30 உடல்களைக் கண்டெடுத்து இருப்பதாகவும் அவற்றில் 19 கிளிநொச்சி கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

சுவிசிலிருந்து மாதமிருமுறைவெளிவரும் நிலவரம் பத்திரிகை யின் ஏப்பிரல் மாத ஆசிரியர் பக்கம்

மொத்தத்தில் 150 பேர் வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டு 500 பேர் வரையானோர் காயம் அடைந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

பலாலி விமானப்படைத் தளத்தில் இருந்து வருகை தந்த விமானப் பயணிகளின் தகவலின் படி 12 பேரூந்துகளின் உடல்களும், காயப்பட்டோரும் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகின்றது. களமுனைச் சேதங்கள் தொடர்பாக சிறி லங்காத் தரப்பு உண்மையை மறைத்தே தகவல்களை வெளியிடுவதால் இது தொடர்பான உண்மை வெளிவராமலும் கூடப் போகலாம்.

யுத்தத்துடன் சேர்ந்து அறிக்கைப் போரையும் நடாத்திவரும் சிறிலங்கா இராணுவத் தளபதிகள் காலம் நிர்ணயித்துத் தொடங்கிய படை நடவடிக்கைகள் யாவும் முன்னேற முடியாமல் முக்கி முனகிக் கொண்டிருக்கும் வேளையிலே, புதிதாக ஒரு களமுனை திறக்கப்படும் என வாழ் மாவாட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தன் பங்குக்கும் அறிவித்திருந்தார். படை நடவடிக்கைகளைத் தொடங்குவது இரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்ற அடிப்படை இராணுவ மரபைக் கூடப் புறக்கணித்து தம்பட்டம் அடித்த சிறிலங்கா இராணுவத் தலைமையின் கனவு முகமாலைக் களமுனையில் நொறுங்கிப் போயுள்ளது.

கூலிக்காக சண்டை பிடிப்பவர்களுக்கும் வாழ்வுக்காகச் சண்டை பிடிப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பது முகமாலைக் களமுனையில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

மக்களின் நலவாழ்வுக்காக, தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தரப்பு போராடிக் கொண்டிருக்கையில், பேரினவாதச் சிந்தனையுடன் செயற்படும் ஒரு சில மனநோயாளிகளின் குரூர இலட்சியங்களை நிறைவேற்ற ஏதுமறியா அப்பாவிச் சிங்கள உயிர்கள் பலிகொடுக்கப்படுவது மனச் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.

அதேவேளை, முகமாலைக் களமுனையில் சிதறிக் கிடப்பது சிங்கள இராணுவத்தின் உடல்கள் மட்டுமல்ல. சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் விரோத அபிலாசையும் தான் என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.

தொடர்புபட்ட கட்டுரை: வன்னிக் களமுனை மாறுமா?

கருத்துக்கள் (1)
mathy wrote on April 26, 2008
Title: thani eelam athu tamil eelam ...
mugamalai thaakkuthal oru veerachchamar em vengaikalukku...thesiyaththalaivar thittamidaludan engal veerapputhalvan thalapathy theepan avarkalin neradi padai viyugaththudam vali nadaththuthaludanum singala ina veriyarkalin padai anikalai thuvamsam seitha seithi arinthu santhosam konden..naanum oru pulam peyarntha eelavan thaan. thayaga mannin vidiyalukkaga por puriyum ovvoru puli maa veerarkalukkaka ovvoru nimitamum piraththani seiyum oru thamilan...murasam vaayilaaga thinam kalaththin seithikalai arinthu varukiren...oru naal intha puthumai seithi thaalaam murasa(m)thil thalaippu seithiyaai varumam athu thamil eelaththin viduthalai yaam.....mugamalai padai munnagarvil veeramaranam adaintha en sella tamil vengaikalukku en kanneer anchaliyai samarppikkintren......


புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >
டிசம்பர் 12 ல் செங்கன் உடன்படிக்கை அமுல்?
31. October 2008 19:00
ரி.என்.ஜே
schengen322.jpgஎதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று  நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. விபரம்
போதைவஸ்து விற்பனையாளருக்கு 15 வருட சிறை
30. October 2008 20:04
ரி.என்.ஜே
gefangnis_hande_durch_gitte.jpgசுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை  சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விபரம்
மக்களை பாதித்த சடுதியான பனிவீழ்ச்சி
30. October 2008 15:58
ரி.என்.ஜே

winter_2008.jpgசுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள்  ஏற்பட்டன. காலை 9.00 மணிக்கு பின்னரே தொடரூந்து சேவை  வழமைக்கு திரும்பியது.

விபரம்
இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றே உடனடித் தீர்வு: நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம்
1. November 2008 21:01
வா.கி.குமார்

10.jpgஇலங்கைப் பிரச்னையில் உடனடியாகத் தீர்வு ஏற்பட போர் நிறுத்தம் ஒன்றே வழி என சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விபரம்
உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும்: கமல்ஹாசன்
1. November 2008 19:53
வா.கி.குமார்

32.jpgஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

விபரம்
இலங்கை முப்படைபடைகள் ஆண்மையிழந்தவை –ரஜினிக்காந்த்
1. November 2008 18:58
வா.கி.குமார்
rajanikanth.jpg35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விபரம்
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
1. November 2008 21:30
வா.கி.குமார்

இந்தோனேஷியாவில் மலுகு மாகாணத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

விபரம்
பாகிஸ்தானில் பால்ய விவாகம் நடத்த முயற்சி -போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்
1. November 2008 20:31
வா.கி.குமார்

pakistan.jpgபாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.

விபரம்
ஜப்பானில் தலாய்லாமா!
31. October 2008 20:12
வா.கி.குமார்

திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா, ஒரு வாரகாலப் பயணமாக ஜப்பானுக்கு வெள்ளிக்கிழமை சென்றார்.

விபரம்
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியினர் ஒழுங்கத்துடன் நடப்பதில்லை: சுனில் கவாஸ்கர்.
1. November 2008 12:45
PTR.
gavasgar_s.jpgடில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார். விபரம்
சச்சினைத் தொடர்ந்து கங்குலி, ஹர்பஜன் மீதும் கில்கிறிஸ்ட் குற்றக்கணைகள்.
1. November 2008 05:21
PTR.
gilley_normal.jpgஇந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார். விபரம்
ஷேன் வட்சனை மோதிய காம்பீருக்கு ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆடத்தடை.
31. October 2008 13:06
PTR.
ga.jpgஅவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார். விபரம்
எம்மவர் நிகழ்வு
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008 (இரண்டாம் நாள்)
title1.jpg25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008

25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.  (படத்தொகுப்பு)

விபரம்
 
சுவிசில் நடைபெற்ற ராகமாலிகா 2008
5.jpgதமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா

பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா 19.10.2008 அன்று மாலை 3.00 மணியளவில், இல்லத்தின் ஆசிரியைகளான திருமதி சரஸ்வதி, திருமதி தாரணி, சுவிஸ் தமிழ்பேரவை துணைப்பொறுப்பாளர் திரு சண் தவராஜா அகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. (படத்தொகுப்பு)

விபரம்