|
மியான்மாரில் சூறாவளியால் பாதிக்கபட்ட மக்களுக்கு சுவிற்சர்லாந்து உதவி |
|
|
|
ரி.என்.ஜே
|
|
7. May 2008 20:17 |
மியான்மாரில் வீசிய மிகப்பெரிய சூறாவளியால் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆரம்ப உதவியாக 700 000 பிராங் பெறுமதியான பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. குடிதண்ணீர், கூடாரங்கள் போன்ற அவசர உதவிப்பொருட்களும் உடனடியாக அனுப்பிவைக்கபட்ட பொருட்களுள் அடங்கும். மியான்மாரில் இதுவரை 22 000 திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாவும் பல லட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்கீஸ் என்று பெயரிடப்பட்ட பாரிய சூறாவளிக்காற்றில் சின்னாபின்னமாக காட்சி தரும் மியான்மாரின் அழிவுற்ற பிராந்தியத்திற்கு உடனடி உதவிக்கா உதவிக்குழு ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் இராணுவ ஆட்சியாளரின் அனுமதி கிடைத்தவுடன் உதவிக்குழு அங்கு செல்லுமென்றும் சுவிஸ் மனிதாபிமான உதவிப்பிரிவின் தலைவர் Toni Frisch தெரிவித்தார்.
பாதிக்கபட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் ஏற்கனவே யங்கோன் மாவட்டத்தில் மலேரியா தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர்.
|