|
சூறாவளி அழிவின் மத்தியிலும் மியன்மாரில் வாக்கெடுப்பு |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
11. மே 2008 13:03 |
சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் அதிகமாக இருப்பதால் வாக்கெடுப்பை பிற்போடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் ஆளும் இராணுவ ஆட்சியாளர்கள் நிராகரித்து வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர்.
தங்களுடைய இராணுவ ஆட்சியை மேலும் தொடர்வதற்காக இந்த மக்கள் வாக்கெடுப்பை இராணுவ ஆட்சியாளர்கள் நடத்தியதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை வாக்கெடுப்பு நிலையங்களில் ஏராளமான இராணுவத்தினர் இருந்ததால் தாங்கள் வேறு வழியின்றி ஆதரவாக வாக்களித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சூறாவளியினால் பாதிக்கப்படாத இடங்களிலும் மேற்படி வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தரைவழியாக ஐக்கிய நாட்டின் முதல் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத் தொடரணி மியன்மாரைச் சென்றடைந்துள்ளது.
ஆனால் மியன்மாரின் இராணுவத் தலைமை வெளிநாட்டு நிவாரண பணியாளர்களுக்கு தடை விதித்துள்ளது.
|