|
யாழ் பண்டைத்தரிப்பு பகுதியில் 17வயது மாணவன் காணாமல்போயுள்ளார் |
|
|
|
வா.கி.குமார்
|
|
11. May 2008 21:39 |
|
யாழ் பண்டைத்தரிப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் 17வயது மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டைத்தரிப்பு பிரம்பத்து பகுதியை சேர்ந்த தங்கத்துரை திவாகரன்(17வயது) என்றும் கா.போ.த.சாதாரண தரம் பயிலும் மாணவனே காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த வியாழக்கிழமை தங்களது வீட்டுக்கு முன்னால் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
|