| ஐபிசி இன்னிசைக்குரல் 2008 – சுவிஸ் |
|
|
| ஆக்கம்: . | |
| 12. மே 2008 10:29 | |
ஐபிசி தமிழ் ஐந்தாவது ஆண்டாக நடாத்தும் இன்னிசைக்குரல் 2008 பாடல் போட்டி நிகழ்வு 11.05.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிறீ அவர்கள் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து கௌசல்யன் கலைக்கூட மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது. படத்தொகுப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவினர் வழங்கிய இசையில் நடைபெற்ற இளம் இன்னிசைக்குரல் 2008, ஆண் இன்னிசைக்குரல் 2008, பெண் இன்னிசைக்குரல் 2008 போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. மண்டபத்தில் திரண்டிருந்த மக்களின் இரசனையுடன் நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில் ஈழம் போய்ஸ் வழங்கிய மேற்கத்தேய நடனம், சிறப்புரை , பரதசேத்திரா நடனாலய மாணவிகளின் எழுச்சி நடனம், கனடாவில் இருந்து வருகை தந்த உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் அவர்களின் உரை, கடந்த வருட இன்னிசைக்குரல் நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகியின் கௌரவப்பாடல் என்பன இடம்பெற்றன. இப்போட்டி நிகழ்வின் நடுவர்களாக மதுரக்குரலோன் கண்ணன், திருமதி சோபா கண்ணன் கலந்து கொண்டு நடுவர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இளம் இன்னிசைக்குரல் வரதராஜன் வைஸ்ணவியும் முத்துக்குமார் பிரவீனாவும் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர். ஆண் இன்னிசைக்குரல் 2008 பாலகுமார் பாலசுப்பிரமணியம் , ஆண் இணை இன்னிசைக்குரல் 2008 சிவகுரு குரு, பெண் இன்னிசைக்குரல் 2008 தர்சினி திலீபன், பெண் இணை இன்னிசைக்குரல் 2008 றெசீனா யோகசிங்கம் ஆகியோர் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர்.
பாடகர்களுக்கான நினைவுப்பரிசுகளை ஐபிசி தமிழோடு கரம் கோர்த்து நிறஇகும் வர்த்தகப் பெருந்தகைகள் வழங்க நடுவர்கள், கலைஞர்கள், உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் ஆகியோருக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகத்தினர் வழங்கி மதிப்பளித்தனர். தொடர்ந்து ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய நன்றியுரை இடம்பெற்றது.
இளம் இன்னிசைக்குரல் 2008 , ஆண் இன்னிசைக்குரல் 2008 , பெண் இன்னிசைக்குரல் 2008 ஆக தெரிவாகிய மூவரும் இவ்வருட இறுதியில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய இன்னிசைக்குரல் நிகழ்வில் கலந்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




சுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச செய்தித்தாள்கள் தமது பத்திரிகைகளின் பழைய தாள்களை வெளியேற்றுவதற்கான செலவை பொறுப்பேற்க வேண்டும், என்று சுவிஸ் சுற்றுப்புற சூழல் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது. இப்பத்திரிகைகளால் அதிகளவான குப்பைகள் நகரப்பகுதியில் சேர்வதாக முறையிடப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி கடைசி நிமிஷத்தில் ரத்து செய்யப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.25 கோடி கொடுப்பதாக ஏ.பி.பரதன் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
பாகிஸ்தான் அரசை அடுத்த மாதம் கலைப்பதற்கு அதிபர் முஷரப் திட்டமிட்டு இருப்பதாக அதிபர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கைதான ஏ.பி.சி.யின் தெற்காசியாவுக்கான நிருபர் பீற்றர் லொய்ட் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்கக் கோரும் மனுவில் நான்கே நாள்களில் 40 லட்சம் பேர் கையெழுத்திட்டனர்.
சீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை குழுவுக்கு குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
இலங்கை-இந்தியா டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி வழங்குவார் என்று இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு திறன் மெருகெறிவருவதாகவும் கூறினார்.
இங்கிலிஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் 2010ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் 18 பிராந்திய அணிகளுடன், வெளிநாட்டு பிராந்திய அணிகள் 2 இணைக்கப்பட்டு மொத்தமாக 20 அணிகளுடன் போட்டிகள் நடைபெறும்.


