| சோனியா, மன்மோகன் நலம் விசாரித்தனர் |
|
|
| வா.கி.குமார் | |
| 18. May 2008 21:30 | |
|
முதுகு வலி, கழுத்து வலி காரணமாக சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி முதல்வர் கருணாநிதியை வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் தொலைபேசி மூலம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பிரதமர் நலம் விசாரித்தார்: பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் முதல்வர் கருணாநிதியிடம் நலம் விசாரித்ததோடு, பூங்கொத்துகளை அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் நலம் விசாரித்ததோடு பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி உள்ளார். சனிக்கிழமை வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நலம் விசாரித்தனர்.
