| தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான நிலையை உயர்த்துமாறு கோரிக்கை |
|
|
| ஆக்கம்: வா.கி.குமார் | |
| 20. மே 2008 08:19 | |
|
தமிழகத்தில் அகதிகளாகியுள்ள இலங்கையர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணங்கள் போதுமானவையல்ல என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடுகையில் தமது வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானவையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிவாரணப்பொருட்களை வழங்கிவருகிறது ஒரு அகதி ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு அரை கிலோ சீனியை வழங்குகிறது ஆனால் குடும்பம் ஒன்றுக்கான சீனி நுகர்வு இதனை விட அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை தவிர வெளியில் தாம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாரிய விலைகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இருப்பதாக அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே தமது அகதி அந்தஸ்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அகதிகள் கோரியுள்ளனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





