|
வேக எல்லையை மீறியவர்கள் பிணையில் விடுதலை வாகனங்கள் பறிமுதல் |
|
|
|
ஆக்கம்: சுவிஸ் நிருபர்
|
|
20. மே 2008 18:13 |
சுவிஸ் வீதிகளில் வேக எல்லையை மீறி 200 கி.மீ.மணிக்கு மேற்பட்ட வேகத்தில் வாகனங்களைச் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படடிருந்த ஒன்பது பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுவிஸ் காவல்துறையினரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
இவ் வாகனங்களைச் செலுத்திய சாரதிகள் சீனா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு குழுவாக சுவிற்சர்லாந்திற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட வேளையிலேயே வேக எல்லையை மீறி வாகனங்களைச் செலுத்தியுள்ளனர். ஒரு லொறியை இவர்கள் மணித்தியாலம் 134 கிலோமீற்றர் வேக வித்தியாசத்தில் முந்திச் சென்றுள்ளனர். ஆகக் கூடிய வேகம் 229 கி.மீ.மணி வரை பதிவுசெய்யப்பட்டுள்ளது..
இந்தக் குழு மே 5ம் திகதி வேகவீதி யு3 ல் கோர்கனிலிருந்து சூரிச் சென்றபோது வேகக் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் சூரிச் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
|