|
பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி |
|
|
|
ஆக்கம்: வா.கி.குமார்
|
|
20. மே 2008 19:25 |
பிலிப்பின்ஸில் மனநிலை பாதித்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் பலியாகியதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வரும் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தென்புறம் அமைந்துள்ள அர்னாலா கிராமத்தில் மேற்படி சம்பவம் நிகழந்துள்ளது.
நேற்று அதிகாலை நேரத்தில் அவர்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த போது, இயந்திரத் துப்பாக்கியுடன் அப்பகுதிக்கு வந்த ஒருவர், 4 வீடுகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 6 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது மனநிலை பாதித்த மனிதரின் வெறிச் செயலெனவும், குறித்த நபரைத் தேடி வருவதாகவும் அந்த நாட்டு பொலீஸார் தெரிவித்தனர்.
|