|
ஜூன் 2ல் மாவோயிஸ்ட் தலைமையில் நேபாளில் புதிய அரசு! |
|
|
|
வா.கி.குமார்
|
|
20. May 2008 20:55 |
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையிலான அரசு அமையவேண்டும் என்பதில் அக் கட்சியின் தலைவர் பிரசண்டா உறுதியாக உள்ளார். அரசு அமைப்பது தொடர்பாக நிபந்தனை விதிக்கும் ஐக்கிய மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சாடியுள்ள அவர், ஜூன் 2ம் திகதி புதிய அரசு அமையும் என்று கூறியுள்ளார்.
CNN மற்றும் IPN தொலைகாட்சிகளின் "டெவில்ஸ் அட்வகேட்' என்ற நிகழ்ச்சியில் கரன் தாப்பருக்கு பேட்டியளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் அதிபராக தாம் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தமது கட்சியின் விருப்பம் எனக் கூறிய அவர், அதற்கான வழிமுறைகளை அரசியல் சட்டத்தில் ஏற்படுத்துவதற்கு காலதாமதம் ஆகுமென்றால், உயர்ந்த அதிகாரங்களுடன் கூடிய பிரதமர் பதவியை வகிப்பதற்குத் தாம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
|