20. November 2008 14:32
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
இணைய செய்திகள்
பதிவு புதினம் சங்கதி தமிழ்வின்info தமிழ்பிபிசி தமிழ் யாழ் இணையம்
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
13. October 2008 13:01
4. October 2008 12:47
11. October 2008 23:48
3. October 2008 18:45
முக்கிய செய்தி
2. November 2008 12:23
1. November 2008 06:30

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை தமிழீழ கடற்புலிகள் அணிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் டோரா தாக்குதல்...

சிறுத்தீவில் கலங்கிய கடற்படை: தீரம் குறையவில்லை என்ற கடற்புலிகள். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
தமிழீழத்தில் இருந்து த.பகலவன்.   
30. May 2008 15:00
ceruthivu.jpgயாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது.

குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர்.
 
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. இன்னும் சில காலத்தில் அவர்கள் முழுமையா அழிக்கப்பட்டு விடுவார்கள். என்று இலங்கைப் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட  அரசாங்க ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் தமது தீரம் இன்னும் குறையவில்லை என்று விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்லியுள்ளனர்.
 
யாழ் நகரப்பகுதியின் தெற்கே 1.5 கிலோமீற்றர் தூரத்தில் மண்டைதீவு கடற்படை முகாமுக்கு அருகாமையில் சிறுத்தீவு கடற்படைமுகாம் அமைந்துள்ளது.

 

பூநகரி பகுதியில் இருந்து விரைந்து வந்த கடற்புலிகளின் சிறப்பு கொமோண்டோக்கள்  வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் சிறுத்தீவு படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரப்பகுதி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்துள்ளனர்.

இதன்போது கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படும் அதிநவீன கருவிகளையும், ஆயுதங்கiயும் கைப்பற்றியுள்ளதுடன், எடுத்துச் செல்ல முடியாதவற்றை முற்றாக அழித்துள்ளனர்.
 
கடற்புலிகளின் இந்த ஈரூடகத் தாக்குதலின் போது 13 படையினர்  கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஆனால் குறித்த தகவலை படைத்தரப்பு மறுத்துள்ளதுடன், கடற்புலிகளின்  3 படகுள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறான பொய்த் தகவல்களை படைத்தரப்பு வழமையாக வழங்கி வருகின்றது. இதனை சிங்கள ஊடகத்துறையே தற்போது கணக்கில் எடுப்பதில்லை. 
 
மண்டைதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின்  தீவுப்பகுதிகள் சிறந்த சுற்றுலாத்தலங்களாக விளங்கக் கூடியவை ஆனால், 1985 மற்றும் 1990 களில் குறித்த தீவுப்பகுதிகள் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதன் பின்னர் இந்த தீவுப்பகுதிகள் முட்கம்பி மற்றும், கண்ணி வெடிகளினால் சிறைப்படுத்தப்பட்டது.
 
தற்போதைய பாதுகாப்பு செயலாளர் போத்தபாய ராஜபக்ஸ மற்றும்  தற்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் இராணுவ கேணல்களாக 1990ஆம் ஆண்டு இருந்தபோது யாழ் கோட்டையை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளும் நோக்குடன் பாரிய படைநகர்வொன்றை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த முன்னகர்வு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டது. முன்னகர்வு நடவடிக்கைகளில் தோல்வியடைந்த இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்று மண்டைதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுப்குதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
 
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினர் 1991 மற்றும் 1993 காலப்பகுதிகளில் முன்னகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தோல்வியுற்றனர்.

குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு துரித வளர்ச்சியடைந்து வந்தது. இதனையடுத்து மண்டைதீவில் இலங்கைக் கடற்படை பாரிய படைவள மற்றும் தகவல் தொழிநுட்ப வசதிகளுடன் தரிப்பு முகாமொன்றை அமைத்தது.
 
குறித்த காலப்பகுதியில் மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்த துரித வேகப்படகுகள் சிலவற்றை அழித்துவிட்டு ஒரு படகினை கடற்புலிகள்  கைப்பற்றிச் சென்றிருந்தனர்.

 

இதனையடுத்து மண்டைதீவு கடற்படைத்தளத்தின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்திய கடற்படை, அதற்காக மண்டை தீவை அண்மித்த சிறுத்தீவை தமது ராடர் தகவல் பரிமாற்ற மையமாக மாற்றியது. இதன் பின்னர் சிறுத்தீவு யாழ்  மேற்கு கடற்பிராந்தியத்தில் பாரிய தகவல் வழங்கல்களை கடற்படைக்கு செய்து வந்தது.
 
இந்த நிலையிலேயே கடற்புலிகளின் குறித்த தாக்குதலினால் இலங்கைக் கடற்படை நிலைகுலைந்து போயுள்ளதுடன், யாழ் கரையோரப்பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதி;ல் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளர்.

1999 -2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள்  வடமராட்சிக் கிழக்கு மாமுனை-குடாபரப்பு பகுதியில் தரையிறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த தரையிறக்கம் ஆணையிறவு படைத்தளம் புலிகளால் இலகுவில் கைப்பற்றப்பட்டது.
 
இந்த நிலையில் யாழ் நகரப்பகுதிக்கு அண்மித்த பகுதி வரை வந்து தாக்குதல் நடத்தி சென்றதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசங்கப் படைகளினால் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள். புலிகளின் எதிர்காலத்திட்டங்கள் அனைத்தும் படைத்தரப்பினரால் முறியடிக்கப்பட்டு வருகின்றது என்ற இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிரச்சாரத்தை மீண்டுமொரு தடவை விடுதலைப் புலிகள் தவிடுபொடியாக்கியுள்ளனர.

கருத்துக்கள் (0)

புதிய கருத்துக்களை எழுதவும்
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
smile
wink
laugh
grin
angry
sad
shocked
cool
tongue
kiss
cry
smaller | bigger

busy
 
< முந்தைய   அடுத்த >
டிசம்பர் 12 ல் செங்கன் உடன்படிக்கை அமுல்?
31. October 2008 19:00
ரி.என்.ஜே
schengen322.jpgஎதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று  நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. விபரம்
போதைவஸ்து விற்பனையாளருக்கு 15 வருட சிறை
30. October 2008 20:04
ரி.என்.ஜே
gefangnis_hande_durch_gitte.jpgசுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை  சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விபரம்
மக்களை பாதித்த சடுதியான பனிவீழ்ச்சி
30. October 2008 15:58
ரி.என்.ஜே

winter_2008.jpgசுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள்  ஏற்பட்டன. காலை 9.00 மணிக்கு பின்னரே தொடரூந்து சேவை  வழமைக்கு திரும்பியது.

விபரம்
இலங்கையில் போர்நிறுத்தம் ஒன்றே உடனடித் தீர்வு: நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம்
1. November 2008 21:01
வா.கி.குமார்

10.jpgஇலங்கைப் பிரச்னையில் உடனடியாகத் தீர்வு ஏற்பட போர் நிறுத்தம் ஒன்றே வழி என சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விபரம்
உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும்: கமல்ஹாசன்
1. November 2008 19:53
வா.கி.குமார்

32.jpgஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

விபரம்
இலங்கை முப்படைபடைகள் ஆண்மையிழந்தவை –ரஜினிக்காந்த்
1. November 2008 18:58
வா.கி.குமார்
rajanikanth.jpg35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விபரம்
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
1. November 2008 21:30
வா.கி.குமார்

இந்தோனேஷியாவில் மலுகு மாகாணத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

விபரம்
பாகிஸ்தானில் பால்ய விவாகம் நடத்த முயற்சி -போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்
1. November 2008 20:31
வா.கி.குமார்

pakistan.jpgபாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.

விபரம்
ஜப்பானில் தலாய்லாமா!
31. October 2008 20:12
வா.கி.குமார்

திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா, ஒரு வாரகாலப் பயணமாக ஜப்பானுக்கு வெள்ளிக்கிழமை சென்றார்.

விபரம்
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியினர் ஒழுங்கத்துடன் நடப்பதில்லை: சுனில் கவாஸ்கர்.
1. November 2008 12:45
PTR.
gavasgar_s.jpgடில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார். விபரம்
சச்சினைத் தொடர்ந்து கங்குலி, ஹர்பஜன் மீதும் கில்கிறிஸ்ட் குற்றக்கணைகள்.
1. November 2008 05:21
PTR.
gilley_normal.jpgஇந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார். விபரம்
ஷேன் வட்சனை மோதிய காம்பீருக்கு ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆடத்தடை.
31. October 2008 13:06
PTR.
ga.jpgஅவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார். விபரம்
எம்மவர் நிகழ்வு
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008 (இரண்டாம் நாள்)
title1.jpg25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
உறவுக்கு உயிர்கொடுப்போம் சுவிஸ் 2008

25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும்  மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக  உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.  (படத்தொகுப்பு)

விபரம்
 
சுவிசில் நடைபெற்ற ராகமாலிகா 2008
5.jpgதமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. (படத்தொகுப்பு)
விபரம்
 
பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா

பிறிபேர்க் தமிழர் இல்லத்தின் 7 வது ஆண்டு விழா 19.10.2008 அன்று மாலை 3.00 மணியளவில், இல்லத்தின் ஆசிரியைகளான திருமதி சரஸ்வதி, திருமதி தாரணி, சுவிஸ் தமிழ்பேரவை துணைப்பொறுப்பாளர் திரு சண் தவராஜா அகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. (படத்தொகுப்பு)

விபரம்