| சிறுத்தீவில் கலங்கிய கடற்படை: தீரம் குறையவில்லை என்ற கடற்புலிகள். |
|
|
| தமிழீழத்தில் இருந்து த.பகலவன். | |
| 30. May 2008 15:00 | |
யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது.
குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர்.
இதன் மூலம் தமது தீரம் இன்னும் குறையவில்லை என்று விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் சொல்லியுள்ளனர்.
பூநகரி பகுதியில் இருந்து விரைந்து வந்த கடற்புலிகளின் சிறப்பு கொமோண்டோக்கள் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் சிறுத்தீவு படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரப்பகுதி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்துள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படும் அதிநவீன கருவிகளையும், ஆயுதங்கiயும் கைப்பற்றியுள்ளதுடன், எடுத்துச் செல்ல முடியாதவற்றை முற்றாக அழித்துள்ளனர்.
குறித்த முன்னகர்வு நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டது. முன்னகர்வு நடவடிக்கைகளில் தோல்வியடைந்த இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்று மண்டைதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுப்குதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு துரித வளர்ச்சியடைந்து வந்தது. இதனையடுத்து மண்டைதீவில் இலங்கைக் கடற்படை பாரிய படைவள மற்றும் தகவல் தொழிநுட்ப வசதிகளுடன் தரிப்பு முகாமொன்றை அமைத்தது.
இதனையடுத்து மண்டைதீவு கடற்படைத்தளத்தின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்திய கடற்படை, அதற்காக மண்டை தீவை அண்மித்த சிறுத்தீவை தமது ராடர் தகவல் பரிமாற்ற மையமாக மாற்றியது. இதன் பின்னர் சிறுத்தீவு யாழ் மேற்கு கடற்பிராந்தியத்தில் பாரிய தகவல் வழங்கல்களை கடற்படைக்கு செய்து வந்தது.
1999 -2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகள் வடமராட்சிக் கிழக்கு மாமுனை-குடாபரப்பு பகுதியில் தரையிறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த தரையிறக்கம் ஆணையிறவு படைத்தளம் புலிகளால் இலகுவில் கைப்பற்றப்பட்டது. கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|



யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது.






