| பணவீக்கம் அதிகரிக்கலாம் – சுவிஸ் மத்திய வங்கி எச்சரிக்கை |
|
|
| ரி.என்.ஜே | |
| 30. May 2008 22:34 | |
அதிகரித்து வரும் எண்ணைய் விலையின் விளைவு சுவிற்சர்லாந்தில் பணவீக்க நிலமையை உயர் நிலைக்கு இட்டுச்செல்லலாம் என்று மத்திய வங்கித் தலைவர் ஜெயான் பியர் ரோத் எச்சரித்துள்ளார்.
பொருளியல் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த திரு ரோத் பணவீக்க அழுத்த நிலை உயர்வாக இருப்பதாக குறிப்பிட்டார். ஏப்ரல் மாதத்தில் சுவிற்சர்லாந்தின் பணவீக்க நிலை 2.3 என மார்ச் மாதத்தை விட சற்றே மேம்பட்ட நிலையில் உள்ளது. வருட சராசரி பணவீக்க நிலை இரண்டு வீதத்தை தாண்டிய நிலையில் உள்ளது. எண்ணெய் விலை அதிகரிப்பானதுபொதுவாகவே எல்லா கைத்தொழில் நாடுகளிலும் பணவீக்கத்தை ஏற்படுத்த வல்லது. சுவிற்சர்லாந்தில் பெற்றோல் விலை லிற்றர் 3 பிராங்காக அதிகரிக்கலாம் என்று கடந்த வாரம் சுவிஸ் ஊடகங்க்களால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|



அதிகரித்து வரும் எண்ணைய் விலையின் விளைவு சுவிற்சர்லாந்தில் பணவீக்க நிலமையை உயர் நிலைக்கு இட்டுச்செல்லலாம் என்று மத்திய வங்கித் தலைவர் ஜெயான் பியர் ரோத் எச்சரித்துள்ளார்.
