| சுவிசில் நடைபெற்ற "மாணவர் எழுச்சி நாள் 08" |
|
|
| . | |||||||||
| 8. June 2008 10:49 | |||||||||
தியாகி பொன். சிவகுமார் அவர்களின் 34வது ஆண்டு ஞாபகார்த்தமாக மாணவர் எழுச்சி நாள் 07.06.08 அன்று சுவிஸ் நாட்டில் அரோ நகரத்தில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நினைவு கூறப்பட்டது. (படத்தொகுப்பு)
16.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் பொதுச்சுடரினை அரோ மாநிலத்தைச் சேர்ந்த உப பொறுப்பாளர் செல்வன் கிருசாந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் செல்வன் திலீபன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். பின்னர் தமிழ் இளையோர் அமைப்பு அரோ மாநில செயற்பாட்டாளர் செல்வி ஜனுயா அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பொன். சிவகுமார் அவர்களின் நினைவுப் படத்திற்கு மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. கலைபண்பாட்டுக் கழக இளையோர்களின் எழுச்சி இசை நிகழ்வுடன் ஆரம்பமான கலைநிகழ்வில் மாநில ரீதியாக இளையோர் அமைப்பினர் மிகவும் எழுச்சி கரமான நிகழ்வுகளை தந்திருந்தார்கள். இந் நிகழ்வில் தியாகி சிவகுமாரனுடன் பழகிய எழுத்தளாரும் கவிஞருமான அரவிந்தன் அவர்கள் பிரான்ஸில் இருந்து வருகைதந்து சிறப்புரை ஆற்றியிருந்தார். வரலாறு சொல்லும் பாடம் எனும் நூல் இவ் விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் நூலின் வெளியீட்டு உரையினை கலைபண்பாட்டுக் கழகத்தின் அறிவிப்பாளர் திரு. சுரேஸ் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூலினை சுவிஸ்கிளைப்பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்தும் பல்வேறுபட்ட எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதியாக மாணவர் எழுச்சிப் பிரகடனம் தமிழ் இளையோர் அமைப்பினரால் வாசிக்கப்பட்டது. அத்துடன் தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. |
|||||||||
| < முந்தைய | அடுத்த > |
|---|






தியாகி பொன். சிவகுமார் அவர்களின் 34வது ஆண்டு ஞாபகார்த்தமாக மாணவர் எழுச்சி நாள் 07.06.08 அன்று சுவிஸ் நாட்டில் அரோ நகரத்தில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நினைவு கூறப்பட்டது. 




எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள் ஏற்பட்டன.
இலங்கைப் பிரச்னையில் உடனடியாகத் தீர்வு ஏற்பட போர் நிறுத்தம் ஒன்றே வழி என சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.
டில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார்.
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார்.
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது.
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. 

