29. August 2008 19:58
 
 
சுவிஸ் பேர்ண் தமிழர் இல்லம் கௌசல்யன் கலைக்கூடம் வழங்கிய "தமிழர் கலைவிழா" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
10. June 2008 12:59
02.jpgபேர்ண் தமிழர் இல்லம் கௌசல்யன் கலைக்கூடம் வழங்கிய தமிழர் கலைவிழா 08.06.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ணில் நடைபெற்றது.  ஆரம்ப நிகழ்வாக விழாச்சுடர் ஏற்றப்பட்டதோடு லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெப்.கேணல் செல்வி அவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. (படங்கள்)

மண்டபம் நிறைந்திருந்த மக்கள் தாயக மீட்பிலே தன்னை வித்தாக்கிய லெப்.கேணல் செல்வி அவர்களுக்குத் தமது மலர்வணக்கத்தைச் செலுத்தினர்.

இதை தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பித்தன.

 

 03.jpg 09.jpg 
 26.jpg  30.jpg
 52.jpg  59.jpg
   

 

மேலதிக படங்கள்
கௌசல்யன் கலைக்கூடத்தில் கலைகளைப் பயின்று வரும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்திய இந்நிகழ்வில் சுரத்தட்டு(கீபோட்), வீணாகானம், வயலின் கச்சேரி , பரத நாட்டியம், கராத்தே, எழுச்சி நடனம் என்பவற்றோடு சுவிசில் கலைகளைக் கற்பிக்கும் ஏனைய ஆசிரியர்களின் மாணவிகளினது பரதநாட்டியமும்   இடம்பெற்றன.


ஐரோப்பாவில் முதன் முறையாக கௌசல்யன் கலைக்கூட மாணவர்களின் சுரத்தட்டு அரங்கேற்றம் நடைபெற்றது. மதுரக்குரலோன் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இச் சுரத்தட்டு அரங்கேற்றத்தில் ஐந்து மாணவர்கள் சுரத்தட்டு அரங்கேற்றம் செய்து சான்றிதழும் நினைவுப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


மதுரக்குரலோன் கண்ணன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணர்வுப் பாடல்களையும் பாடியிருந்தார்.  தமிழர் இல்ல ஒருங்கிணைப்பாளர் மதியழகன் அவர்களின் சிறப்புரையும்,

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அல்பேட் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன. பேர்ணஇ தமிழர் இல்ல செயற்பாட்டாளர்களால் பங்குபற்றிய அனைத்து மாணவர்களும் நினைவுப் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு கலைஞர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.

 
< முந்தைய   அடுத்த >