|
அதிகளவான மக்கள் தொடரூந்து பயணம் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
1. July 2008 11:48 |
சுவிற்சர்லாந்தின் தொடரூந்து சேவை நிறுவனமான SBB யின் தகவலின் படி தொடரூந்தை பாவிக்கும் மக்கள் தொகை கடந்த ஆறு மாதங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னைய ஆண்டின் இக்காலப்பகுதியுடம் ஒப்பிடும்பபோது இவ்வருடம் முதல் ஆறு மாதங்களில் 5 வீதத்தினால் பயணிகள் தொகை அதிகரித்துள்ளதாக SBB மேலாளர் அந்திரயாஸ் மேயர் தெரிவித்தார்.
மேற்படி அதிகரிப்பு யுரோ 2008 இனால் ஏற்ப்பட்டதல்ல என்றும் திரு மேயர் மேலும் தெரிவித்தார். யூரோ 20008 ஆல் கிட்டதட்ட ஒரு மில்லியன் பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் இதற்காக 2700 விசேட சேவைகள் ஒழுங்கு செய்யபட்டதாகவும், எந்த பெரிய விழாக்ளுமின்றி பல மேலதிக சேவைகள் அறிமுகபடுத்தபடவேண்டியிருந்த்தையும் அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் பயணிகள் தொகை புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் 2009 ம் ஆண்டுக்காக புதிய நேர அட்டவணையுடம் புதிய சேவைகளை ஒழுங்கு படுத்தவேண்டு உள்ளதையும் அவர் தெரிவித்தார்.
2030 ம் ஆண்டு காலம் வரையில் புதிதாக 11 பில்லியன் தொகை புதிதாக முதலீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
|