| சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற "கரும்புலிகள் நாள்" |
|
|
| . | |
| 7. July 2008 06:48 | |
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 05.07.1987 அன்று புதிய சகாப்தத்தை எழுதிக் கரும்புலி வரலாற்றை ஆரம்பித்து வைத்த கரும்புலி கப்டன் மில்லர் தன்னுடலையே குண்டாக்கி எதிரியை அழித்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மில்லர் தொடக்கி வைத்த கரும்புலி சகாப்தத்தில் சங்கமித்த கரும்புலி வீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் கரும்புலிகள் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 06.07.08 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கான்ஸ் பிரதேசத்தில் நடைபெற்றது. (படத்தொகுப்பு)
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் சுதா ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரினை யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஏற்றி வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை செங்காளன் மாநிலப் பொறுப்பாளர் ஜெயக்குமார் தேசியக்கொடியினை ஏற்றியதுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கரும்புலி கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கரும்புலி திருவுருவப்படத்திற்கு வித்தியாலய மாணவர்கள் மலர்வணக்கம் செலுத்த மண்டபம் நிறைந்திருந்த மக்கள் தமது மலர்வணக்கத்தை கரும்புலி மறவர்களுக்குச் செலுத்தினர்;. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளை கலைபண்பாட்டுக்கழகம் வழங்கிய எழுச்சி கானங்களைத் தொடர்ந்து சுதந்திர வாசலுக்கான சுடுகலன்கள் எனும் தலைப்பில் கவியரங்கம், எழுச்சி நடனங்கள், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களின் சிறப்புரை, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பேச்சாளர் அல்பேட் அவர்களின் சிறப்புரை, செங்காளன் மாநில கலைஞர்கள் வழங்கிய திருப்பங்கள் நாடகம், சர்க்கான்ஸ் தமிழ் வித்தியாலய மாணவியின் கவிதை, கிறபுண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் வில்லுப்பாட்டு, கிறபுண்டன் தமிழ் வித்தியாலய மாணவியின் பேச்சு என்பன இடம்பெற்றதோடு தேசியக் கொடியிறக்கப்பட்டு தமிழரின் தாரகமந்திரத்தை அனைவரும் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்கக் கரும்புலி மறவர்களின் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு நிறைவுபெற்றது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|






தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 05.07.1987 அன்று புதிய சகாப்தத்தை எழுதிக் கரும்புலி வரலாற்றை ஆரம்பித்து வைத்த கரும்புலி கப்டன் மில்லர் தன்னுடலையே குண்டாக்கி எதிரியை அழித்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மில்லர் தொடக்கி வைத்த கரும்புலி சகாப்தத்தில் சங்கமித்த கரும்புலி வீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் கரும்புலிகள் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 06.07.08 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கான்ஸ் பிரதேசத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள் ஏற்பட்டன.
இலங்கைப் பிரச்னையில் உடனடியாகத் தீர்வு ஏற்பட போர் நிறுத்தம் ஒன்றே வழி என சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு சமூகத்தில் உரிமைகளுக்கு உத்தரவாதம் இல்லாதபோது அங்கு தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.
டில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார்.
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார்.
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது.
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. 

