|
யூரோ 2008 – எல்லைக்கண்காணிப்பு படையினரின் சிறப்பான செயற்பாடு |
|
|
|
ரி.என்.ஜே
|
|
7. July 2008 19:29 |
யூரோ 2008 நடைபெற்ற காலப்பகுதியில் சுவிஸ் எல்லை கண்காணிப்பு படையினர் மிக திறமையாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 149 சட்டவிரோதிகள் இக்காலப்பகுதியில் கண்காணிப்பு படையிரனால் தடுத்து நிறுத்தபட்டதுடன் மொத்தம் 80 கிலோ கிராம் போதைவஸ்தும் எல்லைக்கண்காணிப்பு படையிரால் கைப்பற்றபட்டது.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான எல்லைக் கண்காணிப்பு படையிரன் இக்காலப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபடுத்தபட்டனர். ஜுன் 7, இற்கும் ஜுன் 29, 2008 இற்கும் இடைப்பட்ட காலபகுதியில் 149 பேர் தடுத்து நிறுத்தபட்டதுடன். 702 பேர் எல்லையில் வைத்து திருப்பி அனுப்பபட்டனர்.
தடுத்து நிறுத்தப் பட்டோரில் 110 பேர் “விளையாட்டு வன்முறை ரசிகர்கள்” (Gewalttäter Sport)என்ற பிரிவில் சுவிஸ் தகவற் கோவையில் சேர்க்கபட்டு சுவிற்சர்லாந்திற்குள் இனிவரும் காலங்களிலும் உள்நுழைவதற்கு தடை செய்யப்பட்டனர்.
|