|
பள்ளிவாசல் கட்டுவதற்கெதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் மனு |
|
|
|
ரி.என்.ஜே
|
|
8. July 2008 20:59 |
சுவிற்சர்லாந்தில் ஸ்தூபியுடன் கூடிய பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அதை தடைசெய்யும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரியும் கூட்டாட்சி அரசிடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கையொப்பத்துடன் மனு சமர்ப்பிக்கபட்டுள்ளது. இம்மனுவில் 114 895 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கூட்டாட்சி அரசிடம் இருந்து வெளியிட்டபட்ட அறிக்கையில், “இப்பிரேரணை தனிநபர்களிடம் இருந்தே சமர்ப்பிக்கபட்டுள்ளது. அமைச்சரவையோ அல்லது பாராளுமன்றமோ இதனைத் தயாரிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் மக்களால் அங்கீகரிக்கபடுமிடத்து இதனை அமுல்படுத்தவது கேள்விக்குரியது என்று ஊடகங்களால் தெரிவிக்கபட்டுள்ளது. இச்சட்டமூல அமுல்படுத்தல் மக்களின் மத சுதந்திரத்தை மீறுவதாக அமையும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து இச்சட்டமூலத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கபட்டுள்ளது.
|