| இராக் தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 15. July 2008 16:47 | |
|
இத்தகவலை இராக் போலீஸ் உயர் அதிகாரி உறுதி செய்தார். தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்கு நகரான பகுபாவில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் உள்ளது. இங்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அந்த முகாமினுள் நுழைந்த இரு தீவிரவாதிகள், அங்கு நின்றிருந்த கூட்டத்தினர் மத்தியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 47 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|







இராக்கில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 28 பேர் இறந்தனர்.

