|
சமூக உதவி ஊழியர் பணத்தை கையாடினார் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
16. July 2008 09:44 |
|
பேர்ன் மாநிலத்தில் உள்ள றிகிஸ்பேர்க் என்னும் கிராமத்தில் சமூக உதவியாளர் ஒருவர் 234 000 பிராங் பணத்தை கையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையால் முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள்ளபட்டுள்ளது.
காவற்துறை விசாரணை அறிக்கையின்படி ஏழு பேர் இம்மோசடிச்சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்னர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபடவேண்டியுள்ளதாக கிராமசபை தெரிவித்துள்ளது.
2007 ம் ஆண்டு கோடைகாலபகுதியில் இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. உடனடியாக மேற்படி சமூக ஊழியர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கபட்டார்.
|