| சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை இந்தியா மீள் பரிசீலனை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் |
|
|
| வா.கி.குமார் | |
| 16. July 2008 12:11 | |
|
. தமிழக மீனவர் மீதான அடாவடித்தனங்களை இலங்கை நிறுத்தாமல் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டில் இந்தியா பங்கு பற்றினால் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை கடுமையாக தூண்ட வேண்டுமெனக் கேட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ராமதாஸ் திங்கட்கிழமை கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அதேசமயம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர் மீது மேற்கொள்ளும் அட்டூழியங்கள் தொடர்பாக இலங்கைத் தூதுவரை அழைத்து விசனத்தைத் தெரிவிக்குமாறும் முகர்ஜியிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் பங்கு பற்றும் தீர்மானத்தை இந்திய அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருக்கிறது



