| நம்பகத்தன்மையை இழந்து விட்டார் முஷாரப்: பராக் ஒபாமா |
|
|
| வா.கி.குமார் | |
| 17. July 2008 06:49 | |
|
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அவர், சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். "மக்களிடையே முஷாரப் நம்பிக்கையை இழந்து வருகிறார். அவருக்குப் பதிலாக புதிதாக பதவியேற்றுள்ள அரசுடன் அமெரிக்கா நட்புறவை வளர்க்க வேண்டும். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளை புகலிடமாக கொண்டு அல்-காய்தாவும், தலிபான்களும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை அழிக்க புதிய அரசோடு அமெரிக்கா கூட்டணி அமைக்க வேண்டும்' என்று ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார் |
| < முந்தைய | அடுத்த > |
|---|





பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நம்பகத்தன்மையை இழந்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.




