| தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை அதிபருடன் பேசி தீர்வு - அமைச்சர் அன்புமணியிடம் பிரதமர் உறுதி |
|
|
| வா.கி.குமார் | |
| 17. July 2008 21:29 | |
|
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் குறித்து இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காணப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதற்கான உறுதியை தம்மிடம் பிரதமர் அளித்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் - துப்பாக்கிச்சூடு பிரச்னை, பேரவை பா.ம.க. முன்னாள் உறுப்பினர் காடுவெட்டி குரு கைதானபோது போலீஸôரின் அத்துமீறல் - தமிழக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரை பா.ம.க. குழு தில்லியில் புதன்கிழமை சந்தித்தது. அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி, பா.ம.க. நாடாளுமன்ற - பேரவை உறுப்பினர்கள் குழுவினர் சந்தித்து முறையிட்டனர். ""அடுத்த மாதம் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை செல்லும்போது, அந்த நாட்டு அதிபருடன் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்துப் பேசி தீர்வு காண்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்'' என்றார் அன்புமணி ராமதாஸ்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|







