20. August 2008 20:10
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. August 2008 17:36
3. August 2008 21:01
14. August 2008 16:37
16. August 2008 15:10
27. July 2008 09:43
விடத்தல்தீவுக்கு வீட்டுப்பொருட்களை ஏற்றிவரச் சென்றவர்களைக் காணவில்லையென முறைப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 16:22
mannar1.jpgமன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களின் வீட்டுப் பொருட்களையும், உடைமைகளையும் ஏற்றி வருவதற்காக அங்கு சென்ற நான்கு பேர் காணாமல் போயிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய பார ஊர்திகள் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ.ரெட்ணாகரன் முறையிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் 10 ஆம் யுனிட்டைச் சேர்ந்த இராமச்சந்திரன் தமிழ்வாணன் (29), விவேகானந்தா நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (29), வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த மரிசான்பிள்ளை எழில்வேந்தன் (25), இரத்தினபுரத்தைச் சேர்ந்த நடராஜா சிறிசாயிதரன் (22) ஆகியோரே காணாமல் போயிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இவர்கள் விடத்தல்தீவிலிருந்து இடம்பெயர்ந்த உறவினர்களின் வீட்டுப்பொருட்களையும், உடைமைகளையும் ஏற்றிவரச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் தம்மிடம் முறையிடப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த நால்வரும் விடத்தல்தீவு பகுதிக்குச் சென்ற வேளையிலேயே இராணுவத்தினர் விடத்தல்தீவு பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

 
< முந்தைய   அடுத்த >