| சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் அதிகாரம் அதிகார சபைக்கு உண்டு - அரசாங்கம் அறிவிப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 20:27 | |
சட்டவிரோத குடியிருப்புக்களை அகற்றும் விசேட அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உண்டு என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: சட்டவிரோதமான குடியிருப்புக்களை அமைப்பது தவறான செயலாகும். கொம்பனி வீதி கிளனி பெசேஜில் இவ்வாறான சட்டவிரோதமாக அத்துமீறி கட்டப்பட்ட வீடுகளேயே அப்புறப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தால் வீடுகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவேஇ இது தொடர்பாக எதுவிதமான கருத்தையும் கூற நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இதேவேளை அராங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த வீடு உடைக்கும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே இந்நடவடிக்கை நிறுத்தப்படதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





சட்டவிரோத குடியிருப்புக்களை அகற்றும் விசேட அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உண்டு என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.



