| தீவிரவாதத்துக்கு எதிராக 40 லட்சம் கையெழுத்து |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 20:23 | |
|
பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் வலுவாகிவரும் தீவிரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியை அரசுசாரா அமைப்பு ஒன்று தொடங்கியது. இப்பணி தொடங்கிய நான்கே நாள்களில் 40 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. இந்தப் பணிக்காக 6 ஆயிரம் தன்னார்வத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 6 கோடி பேரிடம் கெயெழுத்து வாங்குவதே இலக்கு என இந்த அமைப்பின் ஆலோசகர் மக்மூத் தெரிவித்தார். "நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல, எங்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள்' என்பதை வலியுறுத்தும் விதமாக பாகிஸ்தானின் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மூலம் பிரசாரம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பிரசாரத்தின் மூலம் மற்ற சமூகத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அமைதியையும், சகிப்புத் தன்மையையும் ஏற்படுத்துவதே நோக்கம் என அதன் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்கக் கோரும் மனுவில் நான்கே நாள்களில் 40 லட்சம் பேர் கையெழுத்திட்டனர்.



