29. August 2008 19:37
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
2. August 2008 23:48
14. August 2008 16:37
19. August 2008 23:28
8. August 2008 18:51
மீனவர் மீதான தாக்குதலை தடுக்கவேண்டும்: இலங்கைத் தூதரிடம் இந்தியா கண்டிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 06:36

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இலங்கைத் தூதரிடம் இந் திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படையினர் கடந்த 12-ம் தேதி சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக சனிக்கிழமை நடத்தியது.

முன்னதாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.

தூதர் வரவழைக்கப்பட்டார்... இந்நிலையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சி.ஆர்.ஜெயசிங்கே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டார்.

அவரிடம் இந்திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் ரவி பேசினார். அப்போது, மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கும் வகையில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் இந்தியாவுக்கு இலங்கை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

 
< முந்தைய   அடுத்த >