| அமெரிக்கப் படையினரை வாபஸ் பெறும் ஒபாமாவின் யோசனைக்கு ஈராக் பிரதமர் வரவேற்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 21. July 2008 15:38 | |
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமா தெரிவித்த யோசனையை ஈராக் பிரதமர் நூரி அல்-மலிக்கி வரவேற்றுள்ளதாக ஜெர்மனியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பராக் ஒபாமா ஜனதிபதியாகப் பதவியேற்றால், ஈராக்கிலிருந்து 16 மாதங்களுக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்படுமென அவர் குறிப்பிட்டிருந்த போதே, ஈராக் பிரதமர் நூரி அல்-மலிக்கி இதனை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காலக்கெடுவானது மிகப் பொருத்தமானதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அமைந்துள்ளதாகவும் அல்-மலிக்கி தெரிவித்ததாக அந்த நாட்டுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், பத்திரிகைச் செய்தி அல்-மலிக்கியின் கருத்தை துல்லியமாக எடுத்துக் கூறவில்லையெனவும், காலக்கெடு குறித்து யாருடைய திட்டத்தையும் அல்-மலிக்கி அப்படியே அங்கீகரிக்கவில்லையெனவும் அவரது செய்தித் தொடர்பாளரான அலி அல்-தாபா கூறியுள்ளார். இதேவேளை அல்-மலிக்கியின் ஆலோசகரான சாதிக் அல்-ரிபாகியும் இதே கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுத்துக் கொள்வது எங்களது நோக்கமல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமா தெரிவித்த யோசனையை ஈராக் பிரதமர் நூரி அல்-மலிக்கி வரவேற்றுள்ளதாக ஜெர்மனியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
