| இந்தியாவில் 800 தீவிரவாத முகாம்கள்: எம்.கே.நாராயணன் அதிர்ச்சி தகவல் |
|
|
| வா.கி.குமார் | |
| 12. August 2008 20:44 | |
|
சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பது: வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த முகாம்களில் சில உள்ளூர் ஆதரவுடன் செயல்படுகின்றன. இருப்பினும், இந்த தீவிரவாதிகளின் செயல்பாடும் வெளிநாட்டில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை போன்றுள்ளன. சில நேரங்களில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தும்போது இத்தகைய தகவல்கள் தெரியவருகின்றன. கவலை... வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்துவது பெரும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்றார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்.
