| லெபனானில் குண்டு வெடித்து 16 பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 14. August 2008 06:34 | |
|
லெபனானில் தலைநகர் டிரிபோலியில் ஒரு பயணிகள் பஸ்சில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 16 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் 7 பேர் ராணுவ வீரர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இது தீவிரவாதிகளின் தாக்குதல் என்று ஜனாதிபதி மைக்கேல் சுலைமான் தெரிவித்தார். சன்னி பிரிவு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த சண்டையில் 170 ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






