| வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் மக்களின் குழந்தைகளை ஜனாதிபதி சந்தித்தார் |
|
|
| ரி.என்.ஜே | |
| 19. August 2008 10:21 | |
|
12 நாடுகளில் வசிக்கும் இப்பிள்ளைகள் தற்போது கோடை விடுமுறைக்காக சுவிற்சர்லாந்திற்கு வந்திருந்த போதே இச்சந்திப்பு இடம்பெற்றது. இப்பிள்ளைகளுக்கு ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், ஸபானிஸ் ஆகிய மொழிகளில் வணக்கத்தை தெரிவித்த ஜனாதிபதி அவர்களிடம் சகஜமாக மனம்விட்டு உரையாடினார். பிள்ளைகளுடன் தானும் ஒரு குழந்தையைப்போல அவர்களுக்கு விருப்பமான திரைப்படம் என்ன? விருப்பமான நிறம் என்ன? போன்ற வினாக்களை தொடுத்து அவர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டதுடன் எப்படி நாட்டின் ஜனாதிபதியாக வருவது போன்ற விடயங்களை சுவார்ஷியமாக பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தார். பிள்ளைகளும் ஆர்வத்துடம் ஜனாதிபதியிடம் உரையாடினர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதி பாஸ்கால் குஷ்பின் வெளிநாட்டில் வாழும் சுவிஸ் பிரஜைகளின் 42 குழந்தைகளை பாராளுமன்ற மேற்சபை மண்டபத்தில் சந்தித்தார். எட்டு வயதிலிருந்து பதினான்கு வயதாக பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். 
