| வீரச்சோலையில் இரு சக்திவாய்த கிளேமோர் குண்டுகள் மீட்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 17:28 | |
|
இன்று புதன்கிழமை காலை 10மணியளவில் அப்பகுதி பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலினையடுத்து அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினரும் சம்மாந்துறை பொலிஸாரும் இக்கிளேமோர் குண்டை மீட்டதாக தெரிவித்தனர். சுமார் 6கிலோ எடையுடைய இந்த கிளேமோர் குண்டுகள் இரண்டும் அப்பகுதியிலேயே செயலிழக்க செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் அப்பகுதியில் அச்சநிலை தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத் அப்பகுதியில் கடும் தேடுதலும் நடத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு பணிகளும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை தமிழ் கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை சக்திவாய்ந்த இரு கிளேமோர் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
