|
28 வயது பெண் கத்தியால் குத்தபட்டு கொலை |
|
|
|
ரி.என்.ஜே
|
|
21. August 2008 12:15 |
சூரிச் சேபாஹ் (Zürich-Seebach) பணிபுரியும் 28 பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் கொல்லபட்டு கொலை செய்யபட்டார். இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண்மணி உதவிப்பிரவினர் அவ்விடத்திற்கு வருமுன்னே இறந்துவிட்டார்.
நேற்று புதன்கிழமை நள்ளிரவிற்கு சற்று பின்னர் Schaffhauserstrasse யில் அமைந்துள்ள எஸ்ஸோ (ESSO) பெற்றோல் நிலையத்தில் மேற்படி 28 வயதான துருக்கிநாட்டை பூர்வீகமான கொண்டவரும் ஜேர்மனி குடியுரிமை உடையவருமான மேற்படி பெண் கத்தியால் குத்தபட்டு படுகாயமடைந்திருபதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உதவிப்பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்தபோதும் அதற்கு முன்னர் அவரின் உயிர் பிரிந்துவிட்டது.
கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையெனினும் கொள்ளை முயற்சி இதற்கு காரணமாயிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கபட்டுள்ள்ளது. காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|