5. December 2008 05:53
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
19. August 2008 23:28
21. August 2008 23:30
29. September 2008 22:52
4. October 2008 12:47
வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து விமானம் அவசர தரையிறக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பவான்   
24. August 2008 16:59

swiss_intr_airport.jpgவெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து சூரிச்சில் இருந்து மலாக்கா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை சுவிஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு சொந்தமான எயார்பஸ் ஏ 301 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் விமான நிலைய அலுவலகத்துக்கு கிடைத்த அவசர தகவலை அடுத்தே இந்த விமானம் ஜெனிவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த அவசர தரையிறக்கத்தின்போது எந்தவொரு பயணியும் காயமடையவில்லையென சுவிஸ் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விமானத்தில் 142 விமான பயணிகளும் ஆறு சிப்பந்திகளும் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள போதிலும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கைக்காக விமான நிலையம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் மூடப்பட்டதாகவும் எட்டு விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு தவறான தகவலாக இருக்கலாம் என ஜெனிவா விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 
< முந்தைய   அடுத்த >