| பண மழை பொழியட்டும் ! பசித்த வயிறு குளிரட்டும் ! கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக்கொடுப்போம் ! |
|
|
| ஆய்வு; பத்மா | |||||||||
| 27. August 2008 15:01 | |||||||||
இலங்கையின் இனவெறி அரசும் அரச படைகளும் வன்னிப் பெருநில எம் மக்கள் மீது தடைகள் மேல் தடைகளப் போட்டுப் பசியும் பிணியும் கொள்ள வைத்தது. வாழ்வியல் ஆதாரங்களை முடக்கிப் பொருளாதாரத் தடைகளைப் போட்டது. விமானக் குண்டுகள் போட்டும் பல்குழல் எறிகணை செலுத்தியும் பட்டிணி போட்டும் படை நடத்தியும் பதி எழுப்பிப் படை நடத்திக் கொட்டம் போட்டது. திருமலையில் தமிழீழ விடுதலை விமானப் படையால் அடிபட்டுத் தவிக்கிறது. எம்மை எல்லாம் மகிழ வைக்கும் அற்புதமான அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திதான். ஆனாலும் எம் உண்மையான மகிழ்ச்சி வன்னிப் பெருநில தமிழ் மற மக்களின் மகிழ்ச்சியில்தான் உள்ளது.
கிழக்கில் நடந்தது போல் வன்னியும் சலசலப்புக் காட்டியே பிடித்து விடலாம் எனத் தப்புக் கணக்கு போட்டான் எதிரி. எப்போது எதிரி சரியாகக் கணக்குப் போட்டான் என என்னைக் கேட்காதீர்கள். பதில் உங்களுக்கே தெரிந்ததுதானே! அடுத்த அவன் கணக்கு சுமார் 3 இலட்சம் மக்களில: ஒரு இலட்சமாவது தனக்குத் தேறும் என மீண்டும் ஒரு அதுவம் தப்புக் கணக்குத்தான் போட்டான். அந்த 1 இலட்சம் விருந்தாளிகளுக்காக 3 முள்ளுக் கம்பி வேலி போட்ட முகாம்களை அதுவும் வெட்கம் கெட்ட சர்வ தேச செஞ்சிலுவை மற்றும் ஐ.நா. உதவி நிறுவனங்களின் கடை பரப்பிக் காத்திருந்தான் மகிந்தனின் மண்ணின் மைந்தர்களுடன். வுடக்கு மக்களுக்கும் பின்னர் கிழக்கு மக்களுக்கும் கிடைத்த விருந்தை நினைத்துப் பார்க்காமலும் இருப்பாரா வன்னி மக்கள் ? 1 இலட்சம் விருந்தாளிகளை எதிர்பார்த்த குள்ள நரிக் கூட்டத்துக்கு ஒருவருமே போகவில்லை என்கின்றன ஊடகச் செய்திகள். ஏட்டு இலட்சம் பேர் புலிகளின் பகுதியை விட்டு வந்து விட்டனர் என உதய நாணயக்கார, பசில், இரட்ணசிறி விக்கிரமநாயக்கா , கோத்த பாயா, மகிந்தர் பிள்ளையானும் கூட புள்ளி விபரங்களைச் அள்ளி விடலாம். ஆனால் எமக்கு அதுவும் அல்ல முக்கியம். வஞ்ச மனம் படைத்த சிங்களம் வடக்கையும் கிழக்கையும் திறந்த வெளிச் சிறை ஆக்கிய பின்னும் சிக்கிவிடுமா எங்கள் சிறுத்தைகள் இனம்?
குள்ள நரியே நன்கு தெரியும் நமக்கு உன் கள்ள மனம் எனச் சொல்லாமல் செயலால் சொல்லி விட்டனர் எமது மறவர் குல உறவுகள். குடைவிரித்துக் காத்திருந்தவன் சதி வலைக்குள் தப்பிய மக்களைப் பசிப் பிணி வறுமை வலையில் சிக்கி அழிந்து போகாமல் காக்க வேண்டிய கடமை அவர்களின் உறவுகளாகி புலம் பெயர் தமிழர் எம்முடையது இல்லையா ? கொட்டும் மழைக்கு ஒதுங்க ஒரு குடையும் இன்றித் தவிக்கின்றனர் எமது உறவுகள். எமது படை களத்தில் எதிரி படையை போரிட்டு அழிப்பதா ? அல்லது அல்லல் உற்று வாடும் உறவுகளின் கண்ணீரைத் துடைப்பதா ? கண்ணீர் துடைக்கும் பணியில் எம் படை நின்றால் எம் இனத்தை அழிக்கும் பணியில் எதிரி வென்று விடுவான். இப்படியான ஒரு முடிவுக்கா நாம் இத்தனை ஆண்டுகள் பல்லாயிரம் உயிர்களைலுயும் பல கோடி பெறும் சொத்துக்களையும் பலிகொடுத்தோம் ? கூடாது கூடாது ! வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்து விடக் கூடாது. பாதிக் கிணற்றைத் தாண்டிப் பார்க்கும் முட்டாள்கள் அல்ல எமது இனம். வுன்னியில் வாடும் எம் உறவுகள் எமது சொந்தங்கள். எங்கள் உடலும் உயிரும் அவர்கள். அவர்களை நாம் கவனிக்காவிட்டால் வேறு யார் கவனிப்பார் ? உலக நாடுகளுக்கும் இப்போ தெரிந்து விட்டது. ஈழத் தமதிழன் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவன் என்று. அதனால்தான் சிங்களவன் சொல்லும் பொய்களைப் பொய்கள் என்று தெரிந்தும் பேசாது மௌனம் காக்கிறது. தானும் எந்த வித உதவியும் செய்யாது எமது தன்னம்பிக்கையும் மன உறுதியும் ஆற்றலும் எவ்வளவு என எடை போட்டுத் தெரிந்த கொள்ளப் பார்க்கிறது. சுனாமி வந்தபோது தமிழன் எத்தனை ஆற்றல் படைத்தவன் என்பதை உலகமும் கண்டு கொண்டது. கண்டு சென்ற கடலுக்கும் எமது கண்ணீரும் கருணையும் எத்தனை பெரியது எனத் தெரிய முடிந்தது. மீண்டும் எமக்கு முன்னே ஒரு சவாலாக எமது வரலாறு தந்து விட்ட சந்தர்ப்பம் இது. களமுனையில் நிற்கும் எமது படைக்கு இன்னும் ஒரு சுமையாக எமது மக்களின் அவலம் இருக்க வேண்டுமா ? இது இங்கு வாழும் எமக்கு ஏன் ஒரு துன்பச் சுமையாக இருக்க வேண்டும் ? வன்னி மக்கள் யாரர? ஏங்கள் தாய் ! எங்கள் தந்தை ! எங்கள் மாமா ! எங்கள் மாமி ! எங்கள் பிள்ளைகள் ! எங்கள் பேரப் பிள்ளைகள் ! எங்கள் குஞ்சுகள் ! எங்களின் இரத்தமும் சதையும் ஆனவர்கள் ! தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே ! ஏன் எங்கள் மனம் கல்லாய் கருணையின்றி வரண்டு கிடக்கிறது ? எங்களின் மனம் சிங்கள எதிரியின் மனம் போலக் கொடுமை நிறைந்ததா ? எல்லாம் இழந்து ஏதும் இன்றி அங்கு கண்ணீரும் கம்பலையமாய் பசித்த வயிற்றுடன் பரிதவிக்கும் எம் உறவுகளைக் கண்டும் இரங்காத உள்ளங்கள் இருந்து என்ன இலாபம்? தோலைக்காட்சிகளில் பர்த்தால்தான் உண்மை என்ற எண்ணமா? இவற்றைப் புலத்தில் உள்ள தமிழத் தொலைக்காட்சிகள் காட்டிவிடக் கூடாது என்பதற்காகத்தானே எமது இனவிடுதலை நோக்கிச் செயற்பட்ட தொலைக் காட்சிகளை இலங்கை அரசு நிற்பாட்ட வைத்தது.
பொய்ப் பிரச்சாரங்களினாலும் செய்தி இருட்டடிப்புகளாலும் எம் இனம் செத்து அழிந்து விடக் கூடாது. இங்கு நாம் பசிக்காதபோதும் புசித்துப் புசித்துப் புளிச்ச ஏப்பம் விட்டுப் பணத்தையும் நேரத்தையும் ஆடம்பரச் செலவுகள் செயது வீணடிக்கிறோம். அதில் ஒரு பகுதியாயினும் எம் உறவுகளின் உயிரும் மானமும் காக்கப் பயன் படுத்த வேண்டாமா?
தொடர்பு கொள்ளவும்.
Bank Account UBS CHF
கருத்துக்கள் (4)
![]() Pathma wrote on September 15, 2008
கரன் wrote on September 12, 2008
raja iyamperumal wrote on September 12, 2008
roman wrote on August 28, 2008
புதிய கருத்துக்களை எழுதவும்
|
|||||||||
| < முந்தைய | அடுத்த > |
|---|




இலங்கையின் இனவெறி அரசும் அரச படைகளும் வன்னிப் பெருநில எம் மக்கள் மீது தடைகள் மேல் தடைகளப் போட்டுப் பசியும் பிணியும் கொள்ள வைத்தது. வாழ்வியல் ஆதாரங்களை முடக்கிப் பொருளாதாரத் தடைகளைப் போட்டது. விமானக் குண்டுகள் போட்டும் பல்குழல் எறிகணை செலுத்தியும் பட்டிணி போட்டும் படை நடத்தியும் பதி எழுப்பிப் படை நடத்திக் கொட்டம் போட்டது. திருமலையில் தமிழீழ விடுதலை விமானப் படையால் அடிபட்டுத் தவிக்கிறது. எம்மை எல்லாம் மகிழ வைக்கும் அற்புதமான அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திதான். ஆனாலும் எம் உண்மையான மகிழ்ச்சி வன்னிப் பெருநில தமிழ் மற மக்களின் மகிழ்ச்சியில்தான் உள்ளது.

