| டில்லி குண்டு வெடிப்பில் சிறுவன் பலி; 18 பேர் படுகாயம் |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 13:32 | |
|
இந்தியாவின் தெற்கு டில்லில் மெஹரோலி பகுதியிலுள்ள பூச்சந்தையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13 வயது சிறுவன் பலியானதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் டிபன் பாக்ஸில் வைத்திருந்த வெடிபொருளை அங்கு போட்டு விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. பூச்சந்தையை சேர்ந்த வியாபாரிகள் துரிதமாக செயற்பட்டு காயமடைந்தவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இவர்களில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






